ETV Bharat / bharat

5ஆவது மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத்துக்கு ஜாமீன்!

author img

By

Published : Apr 28, 2022, 2:28 PM IST

ஐந்தாவது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுவரும் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு பிணை வழங்கி ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாலு பிரசாத்துக்கு ஜாமீன்
லாலு பிரசாத்துக்கு ஜாமீன்

ராஞ்சி (ஜார்கண்ட்): ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரான லாலு பிரசாத் யாதவ் 1990 முதல் 1997 ஆம் ஆண்டு வரை இருமுறை பீகார் மாநில முதலமைச்சராக இருந்தார். இவர் முதலமைச்சராக இருந்தபோது போலி ஆவணங்கள் மூலம் கால்நடைகளுக்குத் தீவனம் வாங்குவதற்காக அரசு கருவூலங்களில் இருந்து 950 கோடி ரூபாய் பணம் எடுத்து ஊழல் செய்ததாக இவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன.

ஏற்கனவே நான்கு வழக்குகளில் கைது செய்யப்பட்ட லாலு பிரசாத், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நான்கு வழக்குகளிலும் பிணை பெற்றார். இந்த நிலையில் ஐந்தாவது மாட்டுத் தீவன ஊழலான, டொராண்டா கருவூலத்திலிருந்து ரூ.139 கோடி அரசுப் பணம் எடுத்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவருக்கு கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.60 லட்சம் அபராதம் விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

லாலு பிரசாத்துக்கு ஜாமீன்
லாலு பிரசாத்துக்கு ஜாமீன்

இதையடுத்து இந்த வழக்கில் பிணை வழங்கக் கோரி லாலு பிரசாத் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் 22ஆம் தேதி ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, பிணை வழங்குவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று (ஏப்ரல் 28) சிறையில் இருந்து வெளிவருகிறார். பாட்னாவுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி இவர் செல்வார் எனத் தெரிகிறது.

லாலு பிரசாத் தரப்பு வழக்கறிஞர் பிரபாத் குமார் கூறுகையில், "பிணை வழங்குவதற்கான நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன. லாலு பிரசாத் சிறையில் இருந்து இன்று வெளிவருகிறார்" என்று தெரிவித்தார். லாலு பிரசாத் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாட்டுத் தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை

ராஞ்சி (ஜார்கண்ட்): ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரான லாலு பிரசாத் யாதவ் 1990 முதல் 1997 ஆம் ஆண்டு வரை இருமுறை பீகார் மாநில முதலமைச்சராக இருந்தார். இவர் முதலமைச்சராக இருந்தபோது போலி ஆவணங்கள் மூலம் கால்நடைகளுக்குத் தீவனம் வாங்குவதற்காக அரசு கருவூலங்களில் இருந்து 950 கோடி ரூபாய் பணம் எடுத்து ஊழல் செய்ததாக இவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன.

ஏற்கனவே நான்கு வழக்குகளில் கைது செய்யப்பட்ட லாலு பிரசாத், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நான்கு வழக்குகளிலும் பிணை பெற்றார். இந்த நிலையில் ஐந்தாவது மாட்டுத் தீவன ஊழலான, டொராண்டா கருவூலத்திலிருந்து ரூ.139 கோடி அரசுப் பணம் எடுத்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவருக்கு கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.60 லட்சம் அபராதம் விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

லாலு பிரசாத்துக்கு ஜாமீன்
லாலு பிரசாத்துக்கு ஜாமீன்

இதையடுத்து இந்த வழக்கில் பிணை வழங்கக் கோரி லாலு பிரசாத் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் 22ஆம் தேதி ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, பிணை வழங்குவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று (ஏப்ரல் 28) சிறையில் இருந்து வெளிவருகிறார். பாட்னாவுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி இவர் செல்வார் எனத் தெரிகிறது.

லாலு பிரசாத் தரப்பு வழக்கறிஞர் பிரபாத் குமார் கூறுகையில், "பிணை வழங்குவதற்கான நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன. லாலு பிரசாத் சிறையில் இருந்து இன்று வெளிவருகிறார்" என்று தெரிவித்தார். லாலு பிரசாத் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாட்டுத் தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.