ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் தேர்தல் எதிரொலி: புதுச்சேரி ரயில் நிலையத்தில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் இருந்து ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்களை ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

author img

By

Published : Feb 14, 2022, 10:09 AM IST

புதுச்சேரி ரயில் நிலையத்தில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று (பிப்.13) காலை பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது, ரயில்கள் புறப்படும் போதும் புறப்பட்ட பின்னரும் ரயில்வே காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம்.

அதன்படி, ரயில்வே காவல்துறையினர் நேற்று கண்காணிப்பில் ஈட்டுப்பட்ட போது நடைமேடையில் உள்ள சிமெண்ட் கட்டையின்கீழ் மூன்று பைகள் இருப்பதைக் கண்ட அவர்கள் அதனைப் பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.

புதுச்சேரி ரயில் நிலையத்தில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்
புதுச்சேரி ரயில் நிலையத்தில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்

அந்த பையில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 314 குவாட்டர் மதுபான பாட்டில்கள் இருந்தது. இதனையடுத்து, மது கடத்தல் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மது கடத்தலில் ஈடுபட முயன்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி ரயில் நிலையத்தில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்
புதுச்சேரி ரயில் நிலையத்தில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்

மேலும், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்காக கட்சி நிர்வாகிகளால் பொதுமக்களுக்கு வழங்கக் கடத்தப்பட உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி ரயில் நிலையத்தில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்
புதுச்சேரி ரயில் நிலையத்தில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை ரயில்வே காவல் துறையினர் கலால் துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'நாம் தமிழரைப் பார்த்து அஞ்சும் திமுக!'

புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று (பிப்.13) காலை பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது, ரயில்கள் புறப்படும் போதும் புறப்பட்ட பின்னரும் ரயில்வே காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம்.

அதன்படி, ரயில்வே காவல்துறையினர் நேற்று கண்காணிப்பில் ஈட்டுப்பட்ட போது நடைமேடையில் உள்ள சிமெண்ட் கட்டையின்கீழ் மூன்று பைகள் இருப்பதைக் கண்ட அவர்கள் அதனைப் பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.

புதுச்சேரி ரயில் நிலையத்தில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்
புதுச்சேரி ரயில் நிலையத்தில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்

அந்த பையில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 314 குவாட்டர் மதுபான பாட்டில்கள் இருந்தது. இதனையடுத்து, மது கடத்தல் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மது கடத்தலில் ஈடுபட முயன்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி ரயில் நிலையத்தில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்
புதுச்சேரி ரயில் நிலையத்தில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்

மேலும், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்காக கட்சி நிர்வாகிகளால் பொதுமக்களுக்கு வழங்கக் கடத்தப்பட உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி ரயில் நிலையத்தில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்
புதுச்சேரி ரயில் நிலையத்தில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை ரயில்வே காவல் துறையினர் கலால் துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'நாம் தமிழரைப் பார்த்து அஞ்சும் திமுக!'

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.