ETV Bharat / bharat

Odisha train Accident : விபத்து பகுதி மறுசீரமைப்பு... விரைவில் ரயில் போக்குவரத்து!

author img

By

Published : Jun 4, 2023, 10:53 PM IST

மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெறும் தருவாயை எட்டி உள்ளதாகவும் மேல் நிலை மின் இணைப்புகள் சீரமைப்புகள் நிறைவு பெற்றதும் அடுத்த 3 நாட்களில் ரயில் போக்குவரத்து இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Train site
Train site

பாலசோர் : ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் மீது மோதியதில் கோரமண்டல் விரைவு ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தில் தடம் புரண்டு விழுந்த நிலையில் அதன் மீது மோதி யஷ்வந்த்பூர் விரைவு ரயிலும் விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், எலக்ட்ரானிக் இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து எற்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

விரைவில் விபத்துக்கான முழு காரணம் கண்டறியப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "மூன்று ரயில்கள் விபத்தில் சிபிஐ விசாராணை நடத்த வேண்டும் எனக் கோரினார்.

விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் ஜூன் 7ஆம் தேதிக்குள் இயல்பு நிலைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. விபத்து பகுதியில் வயரிங் சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்நிலையில், விபத்து நடந்த பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தண்டவாளத்தில் இருபுறமும் கிடந்த ரயில் பெட்டிகள் புல்டோசர்கள் மற்றும் கிரேன் மூலம் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தெற்கு மற்றும் கிழக்கு ரயில்வேயை இணைக்கும் இருப்பு தண்டவாளம் மற்றும் மற்ற இரண்டு தண்டவாளங்களும் சீரமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேல்நிலை மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டதும், ரயில் போக்குவரத்து மீண்டும் துவக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அடுத்த மூன்று நாட்களில் இந்த பணிகள் நிறைவு பெற்று முழுமை அடையும் என்றும் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், தண்டவாளத்திற்கு மேல் பகுதியில் மின்கம்பிகள் மற்றும் வயரிங் பொருத்தும் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் விபத்திற்கான காரணம் முழுமையாக தெரிய வராத நிலையில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பரிந்துரைத்து உள்ளார்.

அதேநேரம் மூன்று ரயில்கள் விபத்திற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Bihar Bridge Collapse :பாலம் இடிந்து கோர விபத்து! நூலிழையில் உயிர் தப்பிய மக்கள்?

பாலசோர் : ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் மீது மோதியதில் கோரமண்டல் விரைவு ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தில் தடம் புரண்டு விழுந்த நிலையில் அதன் மீது மோதி யஷ்வந்த்பூர் விரைவு ரயிலும் விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், எலக்ட்ரானிக் இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து எற்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

விரைவில் விபத்துக்கான முழு காரணம் கண்டறியப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "மூன்று ரயில்கள் விபத்தில் சிபிஐ விசாராணை நடத்த வேண்டும் எனக் கோரினார்.

விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் ஜூன் 7ஆம் தேதிக்குள் இயல்பு நிலைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. விபத்து பகுதியில் வயரிங் சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்நிலையில், விபத்து நடந்த பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தண்டவாளத்தில் இருபுறமும் கிடந்த ரயில் பெட்டிகள் புல்டோசர்கள் மற்றும் கிரேன் மூலம் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தெற்கு மற்றும் கிழக்கு ரயில்வேயை இணைக்கும் இருப்பு தண்டவாளம் மற்றும் மற்ற இரண்டு தண்டவாளங்களும் சீரமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேல்நிலை மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டதும், ரயில் போக்குவரத்து மீண்டும் துவக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அடுத்த மூன்று நாட்களில் இந்த பணிகள் நிறைவு பெற்று முழுமை அடையும் என்றும் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், தண்டவாளத்திற்கு மேல் பகுதியில் மின்கம்பிகள் மற்றும் வயரிங் பொருத்தும் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் விபத்திற்கான காரணம் முழுமையாக தெரிய வராத நிலையில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பரிந்துரைத்து உள்ளார்.

அதேநேரம் மூன்று ரயில்கள் விபத்திற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Bihar Bridge Collapse :பாலம் இடிந்து கோர விபத்து! நூலிழையில் உயிர் தப்பிய மக்கள்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.