ETV Bharat / bharat

'உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசு மிக சிறப்பாக செயல்படுகிறது'

author img

By

Published : Mar 2, 2022, 6:37 AM IST

உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசு மிக சிறப்பாக செயல்பட்டுவருவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

puducherry-lt-governor-tamilisai-soundararajan-flags-off-helmet-awareness-rally
puducherry-lt-governor-tamilisai-soundararajan-flags-off-helmet-awareness-rally

புதுச்சேரி: கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நேற்று(மார்ச்.1) தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை தெரிவிக்கையில், "தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வாகனம் ஓட்ட வேண்டும். அதேபோல தடுப்பூசி செலுத்துதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பையும் கடைபிடிக்க வேண்டும்.

உக்ரைனில் விவகாரத்தில் மத்திய அரசு மிக சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இந்த பணியில் நான்கு மத்திய அமைச்சர்கள் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாநில மாணவர்களை மீட்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொடர்ந்து நானும், முதலமைச்சரும் கோரிக்கை வைத்து வருகிறோம். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு அவசியம் தேவை - தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி: கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நேற்று(மார்ச்.1) தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை தெரிவிக்கையில், "தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வாகனம் ஓட்ட வேண்டும். அதேபோல தடுப்பூசி செலுத்துதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பையும் கடைபிடிக்க வேண்டும்.

உக்ரைனில் விவகாரத்தில் மத்திய அரசு மிக சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இந்த பணியில் நான்கு மத்திய அமைச்சர்கள் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாநில மாணவர்களை மீட்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொடர்ந்து நானும், முதலமைச்சரும் கோரிக்கை வைத்து வருகிறோம். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு அவசியம் தேவை - தமிழிசை சௌந்தரராஜன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.