ETV Bharat / bharat

ஒரு தடுப்பூசி போடாததால் பல ஊசிகள் போடும் நிலை- ரங்கசாமி உருக்கம்

author img

By

Published : Jun 15, 2021, 3:42 AM IST

புதுச்சேரி: ஒரு கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் தனக்கு கரோனா சிகிச்சையின்போது பல ஊசிகள் போடப்பட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

pudhucherry cm rangasamy on corona vaccine
pudhucherry cm rangasamy on corona vaccine

புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட குருசிகுப்பம், சின்னையாபுரம், வைதிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுகாதாரத்துறை சேவை வழங்க 1954ஆம் ஆண்டு முதல் ஜிப்மர் நகர சுகாதார மையம் செஞ்சி சாலை, பட்டேல் சாலை சந்திப்பில் செயல்பட்டுவருகிறது.

இந்த மையத்தின் கட்டடம் பழுதானதால் 5 கோடி ரூபாய் செலவில் மூன்று மாடிகளுடன் கூடிய புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று (ஜூன். 14) நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்து புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.அப்போது பேசிய அவர், "கரோனா தொற்றை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதற்காக தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது.

நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால்தான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின்போது பல ஊசிகள் போட்டுக்கொள்ள வேண்டிய நிலைக்குச் சென்றேன்.

இந்த நிலை உங்களுக்கு வரக்கூடாது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்" என்றார். இந்த நிகழ்ச்சியில் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன், ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பிகார் அரசியல்: பாஸ்வான் கட்சியில் பிளவு!

புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட குருசிகுப்பம், சின்னையாபுரம், வைதிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுகாதாரத்துறை சேவை வழங்க 1954ஆம் ஆண்டு முதல் ஜிப்மர் நகர சுகாதார மையம் செஞ்சி சாலை, பட்டேல் சாலை சந்திப்பில் செயல்பட்டுவருகிறது.

இந்த மையத்தின் கட்டடம் பழுதானதால் 5 கோடி ரூபாய் செலவில் மூன்று மாடிகளுடன் கூடிய புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று (ஜூன். 14) நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்து புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.அப்போது பேசிய அவர், "கரோனா தொற்றை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதற்காக தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது.

நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால்தான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின்போது பல ஊசிகள் போட்டுக்கொள்ள வேண்டிய நிலைக்குச் சென்றேன்.

இந்த நிலை உங்களுக்கு வரக்கூடாது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்" என்றார். இந்த நிகழ்ச்சியில் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன், ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பிகார் அரசியல்: பாஸ்வான் கட்சியில் பிளவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.