ETV Bharat / bharat

ரெம்ட்சிவிர் விநியோகத்தில் தலையிட்ட பாஜக

author img

By

Published : Apr 21, 2021, 12:09 AM IST

மும்பை: உயிர்காக்கும் ரெம்ட்சிவிர் மருந்து விநியோகத்தில் பாஜக தலையிட்டதாக கூறப்படுவது, மகாராஷ்டிரா, குஜராத்தில் ஆகிய மாநிலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரெம்ட்சிவிர் விநியோகத்தில் தலையிட்ட பாஜகவால் சர்ச்சை
ரெம்ட்சிவிர் விநியோகத்தில் தலையிட்ட பாஜகவால் சர்ச்சை

டாமனை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனமான 'ப்ரக் பார்மா பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் ரெம்ட்சிவிர் மருந்து ஏற்றுமதி செய்ய அனுப்பப்படுவதாக மும்பை போலீசாருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் டோகானியா, ஏற்றுமதி தடையை மீறி 60,000 குப்பிகளை ஏற்றுமதி செய்ய முயற்சித்ததாக போலீசார் கூறினர். இங்குள்ள வைல் பார்லே காவல் நிலையத்தில் குறைந்தது 45 நிமிடங்கள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மகாராஷ்டிராவில் ரெம்ட்சிவிர் குப்பிகளை வழங்குவது தொடர்பாக பாஜக அந்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டிருந்தது.

பின்னர், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பிரவீன் தரேகர், எம்.எல்.ஏ பராக் அலவானி மற்றும் எம்.எல்.சி பிரசாத் லாட் ஆகியோர் பாந்த்ரா-குர்லா வளாக காவல் நிலையத்திற்கு வந்து, டோகானியாவை விசாரிப்பது குறித்து போலீஸ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய வைரஸ் தடுப்பு மருந்தான ரெம்டெசிவிர், அரசாங்க இயந்திரங்கள் மூலம் மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும். அதன் பற்றாக்குறை குறித்து பல மாநிலங்கள் புகார் கூறி வரும் நிலையில், "நன்கொடை" அளிப்பதற்காக பல ஆயிரம் குப்பிகளை பாஜக வாங்கியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, பாஜகவின் குஜராத் பிரிவு இந்த மருந்தை இலவசமாக விநியோகித்திருந்தது. சில நாட்களுக்கு முன்பு தெரிய வந்த மற்றொரு சம்பவத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாக்பூர் நகரத்திற்கு 10,000 ரெம்டெசிவிர் குப்பிகளை சன் பார்மாவிலிருந்து வாங்கினார்.

இந்தியாவை தளமாகக் கொண்ட ப்ரக் பார்மா பிரைவேட் லிமிடெட் ரெம்டெசிவீரின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளது, இது கோவிட்-19 இரண்டாவது அலை பரவலுக்கு பின் உலகம் முழுவதும் இந்த மருந்திற்கு பெரும் தேவை உள்ளது.

ஊடகங்களுடன் பேசிய ஃபட்னாவிஸ், மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாதி அரசாங்கம் வெட்கக்கேடான செயலில் ஈடுபட்டதாக கண்டித்தார். "நாம் கோவிட்டிற்கு எதிராக போராடும் போது, தொற்றுநோயால் மக்கள் உயிரை இழக்கும்போது, ​​அரசாங்கம் இத்தகைய வெட்கக்கேடான செயல்களில் ஈடுபடுகிறது. அவர்கள் ப்ரக் பார்மாவின் உரிமையாளரை தடுத்து வைத்தனர். மகாராஷ்டிரா அரசாங்கத்திடமிருந்தும், டாமன் நிர்வாகத்திடமிருந்தும் தேவையான அனைத்து அனுமதிகளையும் நிறுவனம் பெற்றுள்ளது. மத்திய இரசாயன மற்றும் உர அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூட மகாராஷ்டிராவுக்கு அதிகபட்சமாக குப்பிகளை வழங்குமாறு அந்த நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டார். ஆனால் மாநில அரசு மலிவான அரசியலில் ஈடுபட்டுள்ளது, "என்று அவர் கூறினார்.

காவல்துறையினரின் கடமையில் பாஜக தலையிட்டதாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ்-பாட்டீல் குற்றம் சாட்டினார். "எதிர்க்கட்சிகளிடமிருந்து இதுபோன்ற செயல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். சனிக்கிழமை நடந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்" என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, ரெம்டெசிவருக்கு மக்கள் ஒவ்வொரு இடமாக அலையும்போது, ​​பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற "மனிதகுலத்திற்கு எதிரான செயலில்" எவ்வாறு ஈடுபட முடிகிறது என்று ஆச்சரியம் தெரிவித்தார்.

"இது மஹாராஷ்டிரா மக்களை தனது மலிவான அரசியலுக்காக முதுகில் குத்துவதை போன்றதே தவிர வேறென்னவாக இருக்க முடியும்? எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் அவசரகால மருந்தை வாங்கி ரகசியமாக பதுக்கி வைத்திருக்கிறார் அதை கைப்பற்றியவுடன் மும்பை காவல்துறையினருடன் சண்டையிடுகிறார். வெட்கக்கேடாக இருக்கிறது ஃபட்னாவிஸ். உங்களது நள்ளிரவு ரகசிய செயல்பாடு மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது" என்று சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக, மகாராஷ்டிரா சிறுபான்மை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான நவாப் மாலிக் குஜராத் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கடிதத்தை ட்வீட் செய்ததோடு, மகாராஷ்டிராவை விட குஜராத் ரெம்டெசிவிர் குப்பிகளை அதிகம் பெற்றுள்ளதாகவும், இது மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை நிரூபித்ததாகவும் கூறினார்.

மகாராஷ்டிராவில் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில், ஏற்றுமதியாளர்களின் உரிமங்களை ரத்து செய்வதாக மோடி அரசு அச்சுறுத்தியுள்ளது, ஏற்றுமதியாளர்களுக்கு ஊசிகளை அளிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது மற்றும் மனிதகுலத்திற்கு அவமானம் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் சச்சின் சாவந்த் பிரதமர் மோடியை குற்றம் சாட்டினார்.

மத்திய மந்திரி பியூஷ் கோயலும், "நேற்று முன்தினம், பிரதமர் தனது மதிப்பாய்வில் இந்த நெருக்கடியில் மத்திய மற்றும் மாநிலங்கள் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார். இந்த பின்னணியில், உத்தவ் தாக்கரே அலுவலகம் தேவையற்ற அரசியல் செய்வதை கண்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளார். அவர் வெட்ககேடான அரசியலை விடுத்து பொறுப்பாக செயல்படவேண்டும். தேவையான மருத்துவ ஆக்ஸிஜனை தடையின்றி வழங்குவதற்கு உத்தவ் தாக்கரேவுக்கு உறுதியளிக்கப்பட்டது என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்” என்று ட்வீட் செய்துள்ளார்.

டாமனை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனமான 'ப்ரக் பார்மா பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் ரெம்ட்சிவிர் மருந்து ஏற்றுமதி செய்ய அனுப்பப்படுவதாக மும்பை போலீசாருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் டோகானியா, ஏற்றுமதி தடையை மீறி 60,000 குப்பிகளை ஏற்றுமதி செய்ய முயற்சித்ததாக போலீசார் கூறினர். இங்குள்ள வைல் பார்லே காவல் நிலையத்தில் குறைந்தது 45 நிமிடங்கள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மகாராஷ்டிராவில் ரெம்ட்சிவிர் குப்பிகளை வழங்குவது தொடர்பாக பாஜக அந்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டிருந்தது.

பின்னர், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பிரவீன் தரேகர், எம்.எல்.ஏ பராக் அலவானி மற்றும் எம்.எல்.சி பிரசாத் லாட் ஆகியோர் பாந்த்ரா-குர்லா வளாக காவல் நிலையத்திற்கு வந்து, டோகானியாவை விசாரிப்பது குறித்து போலீஸ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய வைரஸ் தடுப்பு மருந்தான ரெம்டெசிவிர், அரசாங்க இயந்திரங்கள் மூலம் மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும். அதன் பற்றாக்குறை குறித்து பல மாநிலங்கள் புகார் கூறி வரும் நிலையில், "நன்கொடை" அளிப்பதற்காக பல ஆயிரம் குப்பிகளை பாஜக வாங்கியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, பாஜகவின் குஜராத் பிரிவு இந்த மருந்தை இலவசமாக விநியோகித்திருந்தது. சில நாட்களுக்கு முன்பு தெரிய வந்த மற்றொரு சம்பவத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாக்பூர் நகரத்திற்கு 10,000 ரெம்டெசிவிர் குப்பிகளை சன் பார்மாவிலிருந்து வாங்கினார்.

இந்தியாவை தளமாகக் கொண்ட ப்ரக் பார்மா பிரைவேட் லிமிடெட் ரெம்டெசிவீரின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளது, இது கோவிட்-19 இரண்டாவது அலை பரவலுக்கு பின் உலகம் முழுவதும் இந்த மருந்திற்கு பெரும் தேவை உள்ளது.

ஊடகங்களுடன் பேசிய ஃபட்னாவிஸ், மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாதி அரசாங்கம் வெட்கக்கேடான செயலில் ஈடுபட்டதாக கண்டித்தார். "நாம் கோவிட்டிற்கு எதிராக போராடும் போது, தொற்றுநோயால் மக்கள் உயிரை இழக்கும்போது, ​​அரசாங்கம் இத்தகைய வெட்கக்கேடான செயல்களில் ஈடுபடுகிறது. அவர்கள் ப்ரக் பார்மாவின் உரிமையாளரை தடுத்து வைத்தனர். மகாராஷ்டிரா அரசாங்கத்திடமிருந்தும், டாமன் நிர்வாகத்திடமிருந்தும் தேவையான அனைத்து அனுமதிகளையும் நிறுவனம் பெற்றுள்ளது. மத்திய இரசாயன மற்றும் உர அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூட மகாராஷ்டிராவுக்கு அதிகபட்சமாக குப்பிகளை வழங்குமாறு அந்த நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டார். ஆனால் மாநில அரசு மலிவான அரசியலில் ஈடுபட்டுள்ளது, "என்று அவர் கூறினார்.

காவல்துறையினரின் கடமையில் பாஜக தலையிட்டதாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ்-பாட்டீல் குற்றம் சாட்டினார். "எதிர்க்கட்சிகளிடமிருந்து இதுபோன்ற செயல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். சனிக்கிழமை நடந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்" என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, ரெம்டெசிவருக்கு மக்கள் ஒவ்வொரு இடமாக அலையும்போது, ​​பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற "மனிதகுலத்திற்கு எதிரான செயலில்" எவ்வாறு ஈடுபட முடிகிறது என்று ஆச்சரியம் தெரிவித்தார்.

"இது மஹாராஷ்டிரா மக்களை தனது மலிவான அரசியலுக்காக முதுகில் குத்துவதை போன்றதே தவிர வேறென்னவாக இருக்க முடியும்? எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் அவசரகால மருந்தை வாங்கி ரகசியமாக பதுக்கி வைத்திருக்கிறார் அதை கைப்பற்றியவுடன் மும்பை காவல்துறையினருடன் சண்டையிடுகிறார். வெட்கக்கேடாக இருக்கிறது ஃபட்னாவிஸ். உங்களது நள்ளிரவு ரகசிய செயல்பாடு மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது" என்று சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக, மகாராஷ்டிரா சிறுபான்மை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான நவாப் மாலிக் குஜராத் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கடிதத்தை ட்வீட் செய்ததோடு, மகாராஷ்டிராவை விட குஜராத் ரெம்டெசிவிர் குப்பிகளை அதிகம் பெற்றுள்ளதாகவும், இது மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை நிரூபித்ததாகவும் கூறினார்.

மகாராஷ்டிராவில் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில், ஏற்றுமதியாளர்களின் உரிமங்களை ரத்து செய்வதாக மோடி அரசு அச்சுறுத்தியுள்ளது, ஏற்றுமதியாளர்களுக்கு ஊசிகளை அளிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது மற்றும் மனிதகுலத்திற்கு அவமானம் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் சச்சின் சாவந்த் பிரதமர் மோடியை குற்றம் சாட்டினார்.

மத்திய மந்திரி பியூஷ் கோயலும், "நேற்று முன்தினம், பிரதமர் தனது மதிப்பாய்வில் இந்த நெருக்கடியில் மத்திய மற்றும் மாநிலங்கள் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார். இந்த பின்னணியில், உத்தவ் தாக்கரே அலுவலகம் தேவையற்ற அரசியல் செய்வதை கண்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளார். அவர் வெட்ககேடான அரசியலை விடுத்து பொறுப்பாக செயல்படவேண்டும். தேவையான மருத்துவ ஆக்ஸிஜனை தடையின்றி வழங்குவதற்கு உத்தவ் தாக்கரேவுக்கு உறுதியளிக்கப்பட்டது என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்” என்று ட்வீட் செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.