ETV Bharat / bharat

ஹைதராபாத் பப்பில் அதிகாலை அதிரடி ரெய்டு! - முக்கிய பிரமுகர்கள் கைது

ஹைதராபாத்தில் உள்ள பார்களில் காவல்துறையினர் இன்று (ஏப். 3) அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர். இதில் 144 பேர் தடைசெய்யப்பட்ட நேரத்தில் பப்களில் பார்ட்டி செய்தது தெரியவந்தது.

ஹைதராபாத் பப்பில் அதிகாலை நடந்த அதிரடி ரெய்டு- முக்கிய பிரமுகர்கள் கைது!
ஹைதராபாத் பப்பில் அதிகாலை நடந்த அதிரடி ரெய்டு- முக்கிய பிரமுகர்கள் கைது!
author img

By

Published : Apr 3, 2022, 5:32 PM IST

ஹைதராபாத்: ஹைதராபாத், பஞ்சாராஸ் ஹில்ஸ் எனும் இடத்தில் உள்ள ஒரு பப்பில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்ட்டி செய்ததாக 144 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர்.

அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி அதிக நேரம் பார் திறந்து இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த பப்பில் கைது செய்யப்பட்டவர்களில் 33 பெண்களும், சில முக்கிய பிரமுகர்களும் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களும் இருந்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி செயல்பட்டதாக அந்த பப்பின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த அதிரடி ரெய்டு ஹைதராபாத் போதை தடுப்பு பிரிவு போலீசரால் மேற்கொள்ளப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு பொறியியல் பட்டதாரி ஒருவர் அளவுக்கு மீறி போதை பொருள் எடுத்ததால் இறந்தார்.

இதனையடுத்து போதை பொருள் விநியோகம் செய்பவர்களை கண்டறிய காவல் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதன் ஒரு பகுதியாகத்தான் இந்த ரெய்டு நடந்துள்ளது.

இதையும் படிங்க:வெளிநாட்டுச்சிறைகளில் 8,278 இந்திய கைதிகள் : மத்திய அரசு தகவல்

ஹைதராபாத்: ஹைதராபாத், பஞ்சாராஸ் ஹில்ஸ் எனும் இடத்தில் உள்ள ஒரு பப்பில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்ட்டி செய்ததாக 144 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர்.

அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி அதிக நேரம் பார் திறந்து இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த பப்பில் கைது செய்யப்பட்டவர்களில் 33 பெண்களும், சில முக்கிய பிரமுகர்களும் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களும் இருந்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி செயல்பட்டதாக அந்த பப்பின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த அதிரடி ரெய்டு ஹைதராபாத் போதை தடுப்பு பிரிவு போலீசரால் மேற்கொள்ளப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு பொறியியல் பட்டதாரி ஒருவர் அளவுக்கு மீறி போதை பொருள் எடுத்ததால் இறந்தார்.

இதனையடுத்து போதை பொருள் விநியோகம் செய்பவர்களை கண்டறிய காவல் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதன் ஒரு பகுதியாகத்தான் இந்த ரெய்டு நடந்துள்ளது.

இதையும் படிங்க:வெளிநாட்டுச்சிறைகளில் 8,278 இந்திய கைதிகள் : மத்திய அரசு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.