ETV Bharat / bharat

நாளை இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 10:31 PM IST

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்க வரும் பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் கட்சி கொடிகள் விளம்பரங்கள் வைக்க சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) அனுமதி கொடுக்கவில்லை என மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார்.

pm-modi-visit-to-bengaluru-to-congratulate-isro-scientists-no-plan-of-road-show-says-union-minister-shobha-karandlaje
pm-modi-visit-to-bengaluru-to-congratulate-isro-scientists-no-plan-of-road-show-says-union-minister-shobha-karandlaje

பெங்களூரு: சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு தற்போது அதிலிருந்து லேண்டர் மற்றும் ரோவர் தனது பணிகளை வெற்றிகரமாக செய்து வருகிறது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆகஸ்ட் 26ஆம் தேதி பெங்களூருக்கு வரவுள்ளார்.

இந்த நிகழ்விற்கு வரும் பிரதமருக்கு பாஜக கொடிகள் கட்டாமல் விளம்பரங்கள் செய்யாமல் வந்து செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பெங்களூரு வருகை குறித்து விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் சுற்றுப்பயணத்தை முடித்து விமானம் மூலம் நாளை நேரடியாக பெங்களூரு வருகிறார். பெங்களூரு விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க பா.ஜ.க சார்ப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பின் இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். பின் சூரியனை பற்றி ஆய்வு செய்யும் சூர்யாயான் திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என தெரிவித்தார். நாளை காலை 6 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல் விமான நிலையத்தில் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் விதமாக வெல்கம் மோடி ஏற்பாடுகள் பீன்யாவில் 1 கிலோமீட்டர் தொலைவிற்கு நடத்த திட்டமிட்டப்பட்டு இருந்தது ஆனால் சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) அனுமதி அளிக்காததால் இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

மேலும் காரில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர்களுக்கு கைகளை அசைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஓட்டி பெங்களூருரில் சாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு போக்குவரத்து காவல்துறை சார்பாக நகரின் சில பகுதிகளிலில் போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளனர். ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை 4:30 மணி முதல் காலை 9:30 மணி வரை, பின்வரும் சாலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பழைய விமான நிலைய சாலை, பழைய மெட்ராஸ் சாலை, எம்.ஜி. சாலை, கப்பன் சாலை, ராஜ் பவன் சாலை, பல்லாரி சாலை (மேக்ரி வட்டம்), சி.வி. ராமன் சாலை, யஷவந்த்பூர் மேம்பாலம், துமாகூர் சாலை (யஷ்வந்த்பூர் முதல் நாகசந்திரா வரை), மாகடி சாலை, ஹொரவர்துலா சாலை (கோரகுண்டே பாளையத்திலிருந்து) ஜங்ஷன் சுமனஹள்ளி) குப்பி தோட்டப்பா ரோடு, ஜாலஹள்ளி குறுக்கு சாலை ஆகியவற்றை பயண்படுத்துவோர் மாற்று சாலைகளை பயண்படுத்துப்படி தெரிவித்துள்ளனர். மேலும் கனரக வாகனங்கள் காலை 11 மணி வரை மாநகரத்திற்கு வர அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை ஹெச்ஏஎல் விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வரும் பிரதமர் நரேந்திர மோடி சாலை வழியாக பீன்யாவில் உள்ள இஸ்ரோ அலுவலகத்திற்குச் செல்கிறார்.

இதையும் படிங்க: Chandrayaan-3: லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கிய பிரக்யான்! இஸ்ரோ வெளியிட்ட வீடியோ!

பெங்களூரு: சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு தற்போது அதிலிருந்து லேண்டர் மற்றும் ரோவர் தனது பணிகளை வெற்றிகரமாக செய்து வருகிறது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆகஸ்ட் 26ஆம் தேதி பெங்களூருக்கு வரவுள்ளார்.

இந்த நிகழ்விற்கு வரும் பிரதமருக்கு பாஜக கொடிகள் கட்டாமல் விளம்பரங்கள் செய்யாமல் வந்து செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பெங்களூரு வருகை குறித்து விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் சுற்றுப்பயணத்தை முடித்து விமானம் மூலம் நாளை நேரடியாக பெங்களூரு வருகிறார். பெங்களூரு விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க பா.ஜ.க சார்ப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பின் இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். பின் சூரியனை பற்றி ஆய்வு செய்யும் சூர்யாயான் திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என தெரிவித்தார். நாளை காலை 6 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல் விமான நிலையத்தில் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் விதமாக வெல்கம் மோடி ஏற்பாடுகள் பீன்யாவில் 1 கிலோமீட்டர் தொலைவிற்கு நடத்த திட்டமிட்டப்பட்டு இருந்தது ஆனால் சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) அனுமதி அளிக்காததால் இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

மேலும் காரில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர்களுக்கு கைகளை அசைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஓட்டி பெங்களூருரில் சாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு போக்குவரத்து காவல்துறை சார்பாக நகரின் சில பகுதிகளிலில் போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளனர். ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை 4:30 மணி முதல் காலை 9:30 மணி வரை, பின்வரும் சாலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பழைய விமான நிலைய சாலை, பழைய மெட்ராஸ் சாலை, எம்.ஜி. சாலை, கப்பன் சாலை, ராஜ் பவன் சாலை, பல்லாரி சாலை (மேக்ரி வட்டம்), சி.வி. ராமன் சாலை, யஷவந்த்பூர் மேம்பாலம், துமாகூர் சாலை (யஷ்வந்த்பூர் முதல் நாகசந்திரா வரை), மாகடி சாலை, ஹொரவர்துலா சாலை (கோரகுண்டே பாளையத்திலிருந்து) ஜங்ஷன் சுமனஹள்ளி) குப்பி தோட்டப்பா ரோடு, ஜாலஹள்ளி குறுக்கு சாலை ஆகியவற்றை பயண்படுத்துவோர் மாற்று சாலைகளை பயண்படுத்துப்படி தெரிவித்துள்ளனர். மேலும் கனரக வாகனங்கள் காலை 11 மணி வரை மாநகரத்திற்கு வர அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை ஹெச்ஏஎல் விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வரும் பிரதமர் நரேந்திர மோடி சாலை வழியாக பீன்யாவில் உள்ள இஸ்ரோ அலுவலகத்திற்குச் செல்கிறார்.

இதையும் படிங்க: Chandrayaan-3: லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கிய பிரக்யான்! இஸ்ரோ வெளியிட்ட வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.