ETV Bharat / bharat

ஹெச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

author img

By

Published : Feb 6, 2023, 5:04 PM IST

நாட்டின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ஹெச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி
ஹெச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகுருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 6) திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உடனிருந்தனர்.

இந்த தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டிருந்தார். இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலை பிரத்யேக கிரீன்ஃபீல்ட் தொழிற்சாலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டிலேயே ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும் திறனை அதிகரிக்க உதவும். அதேநேரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலை ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த தொழிற்சாலையில் இலகுரக ஹெலிகாப்டர்கள், லைட் காம்பாட் ஹெலிகாப்டர்கள், இந்தியன் மல்டிரோல் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன. அதேபோல அனைத்து ரக ஹெலிகாப்டர்களையும் பழுதுபார்க்கவும், மேம்படுத்தவும் வசதிகள் உள்ளன. இந்த தொழிற்சாலையில் 4.0 தரநிலைகளில் உற்பத்தி அலகுகள் உள்ளன.

அடுத்த 20 ஆண்டுகளில், 3 முதல் 15 டன் எடையுள்ள 1,000 ஹெலிகாப்டர்களை தயாரிக்க ஹெச்ஏஎல் திட்டமிட்டுள்ளது . இந்த தொழிற்சாலை மூலம் 6,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும், எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கும் ஹெலிகாப்டர்கள் ஏற்றுமதி செய்யப்படும்.

இதையும் படிங்க: பெங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கேரள பெண்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகுருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 6) திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உடனிருந்தனர்.

இந்த தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டிருந்தார். இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலை பிரத்யேக கிரீன்ஃபீல்ட் தொழிற்சாலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டிலேயே ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும் திறனை அதிகரிக்க உதவும். அதேநேரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலை ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த தொழிற்சாலையில் இலகுரக ஹெலிகாப்டர்கள், லைட் காம்பாட் ஹெலிகாப்டர்கள், இந்தியன் மல்டிரோல் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன. அதேபோல அனைத்து ரக ஹெலிகாப்டர்களையும் பழுதுபார்க்கவும், மேம்படுத்தவும் வசதிகள் உள்ளன. இந்த தொழிற்சாலையில் 4.0 தரநிலைகளில் உற்பத்தி அலகுகள் உள்ளன.

அடுத்த 20 ஆண்டுகளில், 3 முதல் 15 டன் எடையுள்ள 1,000 ஹெலிகாப்டர்களை தயாரிக்க ஹெச்ஏஎல் திட்டமிட்டுள்ளது . இந்த தொழிற்சாலை மூலம் 6,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும், எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கும் ஹெலிகாப்டர்கள் ஏற்றுமதி செய்யப்படும்.

இதையும் படிங்க: பெங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கேரள பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.