ETV Bharat / bharat

விவசாயிகளை பயங்கரவாதிகள் எனக் கூறிய பாஜக செய்தித்தொடர்பாளர்!

author img

By

Published : Jan 27, 2021, 9:42 PM IST

டெல்லியில் போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள் எனப் பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார். ஆகவே அவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

BJP MLA Sambit Patra ABP news on farmers protest farmers as 'terrorist' farmers protest on Republic day விவசாயிகளை பயங்கரவாதிகள் எனக் கூறிய பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா பயங்கரவாதிகள் டெல்லி விவசாயிகள் போராட்டம் sambit patra
BJP MLA Sambit Patra ABP news on farmers protest farmers as 'terrorist' farmers protest on Republic day விவசாயிகளை பயங்கரவாதிகள் எனக் கூறிய பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா பயங்கரவாதிகள் டெல்லி விவசாயிகள் போராட்டம் sambit patra

டெல்லி: அரசியல் நோக்கங்களுக்காக விவசாயிகளை "பயங்கரவாதிகள்" என்று பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார். ஆகவே அவர் மீதும், சம்பந்தப்பட்ட செய்தி சேனலுக்கு எதிராகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேசிய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், “டெல்லியில் போராடும் விவசாயிகள் கையில் எந்தவொரு ஆயுதமுமின்றி நிராயுதபாணியாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். அவர்களை பாஜக செய்தித்தொடர்பாளர் பயங்கரவாதி என்று வர்ணிக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை டெல்லி வழக்குரைஞர் எம்.எல். சர்மா தாக்கல் செய்துள்ளார். அப்போது, “சம்பந்தப்பட்ட நபர்கள் மீது ஐபிசியின் 182 (அரசு ஊழியரின் சட்ட ஆவண அவமதிப்பு) மற்றும் 211 (பொய்யான ஆதாரங்களை பரப்புதல்) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிய வேண்டும்” என்றார்.

மேலும், “தனிப்பட்ட கருத்துகள் என்ற பெயரில் இதுபோன்று பேசவும், செய்தி நிறுவனங்கள் ஒளிபரப்பவும் தடை விதிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: பாக்யநகரின் தலைவிதி ஒரு குடும்பத்தின் கையில் விடப்படுவது துரதிர்ஷ்டவசமானது !

டெல்லி: அரசியல் நோக்கங்களுக்காக விவசாயிகளை "பயங்கரவாதிகள்" என்று பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார். ஆகவே அவர் மீதும், சம்பந்தப்பட்ட செய்தி சேனலுக்கு எதிராகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேசிய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், “டெல்லியில் போராடும் விவசாயிகள் கையில் எந்தவொரு ஆயுதமுமின்றி நிராயுதபாணியாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். அவர்களை பாஜக செய்தித்தொடர்பாளர் பயங்கரவாதி என்று வர்ணிக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை டெல்லி வழக்குரைஞர் எம்.எல். சர்மா தாக்கல் செய்துள்ளார். அப்போது, “சம்பந்தப்பட்ட நபர்கள் மீது ஐபிசியின் 182 (அரசு ஊழியரின் சட்ட ஆவண அவமதிப்பு) மற்றும் 211 (பொய்யான ஆதாரங்களை பரப்புதல்) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிய வேண்டும்” என்றார்.

மேலும், “தனிப்பட்ட கருத்துகள் என்ற பெயரில் இதுபோன்று பேசவும், செய்தி நிறுவனங்கள் ஒளிபரப்பவும் தடை விதிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: பாக்யநகரின் தலைவிதி ஒரு குடும்பத்தின் கையில் விடப்படுவது துரதிர்ஷ்டவசமானது !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.