ETV Bharat / bharat

வரும் ஜூலைக்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி: பட்டியல் விரைவில் தயார்

author img

By

Published : Jan 6, 2021, 12:30 PM IST

வரும் ஜூலைக்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது எனவும் அதற்கான பட்டியல் தயாராகிவருவதாகவும் அரசு சார்பில் தெவிக்கப்பட்டுள்ளது.

Dr V K Paul
Dr V K Paul

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து, நிதி ஆயோக் அமைப்பின் சுகாதாரத் துறை அலுவலர் வி.கே. பால் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

அதில், ”கோவிட்-19 தடுப்பூசி பெறவேண்டிய நபர்களை முன்னுரிமையின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

வரும் ஜூலைக்குள் சுமார் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே இலக்காகும். முதற்கட்டமாக சுகாதாரத் துறை ஊழியர்கள், முன்கள பணியாளர்கள், அதன் பின்னர் 50 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் என முன்னுரிமை பட்டியிலடப்பட்டு இந்த தடுப்பூசி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களில், நாள்பட்ட நோய் கொண்டவர்கள் அவர்களின் நோய் தீவிரம் ஆகியவை முக்கியமாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி கொண்டு சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 'நாகா பேச்சுவார்த்தைகள் தோற்றால், விளைவுகள் மோசமாக இருக்கும்'

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து, நிதி ஆயோக் அமைப்பின் சுகாதாரத் துறை அலுவலர் வி.கே. பால் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

அதில், ”கோவிட்-19 தடுப்பூசி பெறவேண்டிய நபர்களை முன்னுரிமையின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

வரும் ஜூலைக்குள் சுமார் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே இலக்காகும். முதற்கட்டமாக சுகாதாரத் துறை ஊழியர்கள், முன்கள பணியாளர்கள், அதன் பின்னர் 50 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் என முன்னுரிமை பட்டியிலடப்பட்டு இந்த தடுப்பூசி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களில், நாள்பட்ட நோய் கொண்டவர்கள் அவர்களின் நோய் தீவிரம் ஆகியவை முக்கியமாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி கொண்டு சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 'நாகா பேச்சுவார்த்தைகள் தோற்றால், விளைவுகள் மோசமாக இருக்கும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.