டெல்லி (வடகிழக்கு): ஹவுஸ் ஹாஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்களை இளைஞர்கள் கேலி செய்யும் வீடியோ ஒன்று வெளியானது.
அதில், நடந்து சென்ற இரண்டு பெண்களிடம், குழுமமாக கூடியிருந்த ஆண்கள் என்ன விலை எனக் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த பெண்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நிலமை விபரீதம் ஆவதை உணர்ந்த இளைஞர்கள், “பாலியல் தொழிலாளி என நினைத்து தவறுதலாக கேட்டுவிட்டோம், மன்னித்து விடுங்கள்” எனக் கூறினர்.
காவல் துறை நடவடிக்கை
இந்த வீடியோ குறித்து தெரியவந்ததும் டெல்லி காவல் ஆணையர், இது குறித்து நடவடிக்கை எடுத்து அந்த இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, அந்த இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அந்த முதல் தகவல் அறிக்கையை காவல் ஆணையர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: பெண்களை கேலி செய்த இளைஞர் - நூதன தண்டனையளித்த காவலர்கள்!