ETV Bharat / bharat

மும்பை கலவர வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் 30 வருடங்களுக்கு பின் கைது

author img

By

Published : Dec 11, 2022, 8:45 PM IST

மும்பையில் 1992ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஈடுபட்ட நபரை 30 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளானர்.

மும்பை கலவர வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் 30 வருடங்களுக்கு பின் கைது
மும்பை கலவர வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் 30 வருடங்களுக்கு பின் கைது

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1992ஆம் ஆண்டு நடந்த கலவர வழக்கில் தலைமறைவாகி, 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 47 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மும்பை போலீசார் கூறுகையில், ”கடந்த 1992 ஆம் ஆண்டு திண்டோஷி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கலவர வழக்கில், ஒன்பது பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் இறந்துவிட்டார்.

மீதமுள்ள 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர்கள் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் அவர்களை தேடிவந்தனர். இந்த குற்றவாளிகளில் ஒருவர் மேற்கு புறநகரில் உள்ள திண்டோஷி பஸ் டிப்போவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அவரை இன்று (டிசம்பர் 11) கைது செய்தோம்.

கைது செய்யப்பட்ட குற்றவாளி கடந்த 18 ஆண்டுகளாக அடையாளத்தை மாற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளார் என்பது முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "சலாம் கிடையாது.. நமஸ்காரம்தான்.." கோயில் வழிபாட்டு முறைகளை மாற்றிய அரசு..

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1992ஆம் ஆண்டு நடந்த கலவர வழக்கில் தலைமறைவாகி, 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 47 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மும்பை போலீசார் கூறுகையில், ”கடந்த 1992 ஆம் ஆண்டு திண்டோஷி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கலவர வழக்கில், ஒன்பது பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் இறந்துவிட்டார்.

மீதமுள்ள 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர்கள் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் அவர்களை தேடிவந்தனர். இந்த குற்றவாளிகளில் ஒருவர் மேற்கு புறநகரில் உள்ள திண்டோஷி பஸ் டிப்போவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அவரை இன்று (டிசம்பர் 11) கைது செய்தோம்.

கைது செய்யப்பட்ட குற்றவாளி கடந்த 18 ஆண்டுகளாக அடையாளத்தை மாற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளார் என்பது முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "சலாம் கிடையாது.. நமஸ்காரம்தான்.." கோயில் வழிபாட்டு முறைகளை மாற்றிய அரசு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.