ETV Bharat / bharat

வியட்நாம் பிரதமருடன் மோடி பேச்சு - வியட்நாம் பிரதமருடன் உரையாடிய மோடி

வியட்நாமின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள பாம் மின் சின் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

Modi speaks with Vietnam PM
Modi speaks with Vietnam PM
author img

By

Published : Jul 11, 2021, 6:33 AM IST

Updated : Jul 11, 2021, 7:06 AM IST

டெல்லி: வியட்நாம் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள பாம் மின் சின் உடன் தொலைபேசி மூலம் முதல் முறையாக உரையாடிய பிரதமர் மோடி, இந்திய பெருங்கடல் விவகாரம், கரோனா பேரிடர் காலத்தில் வியட்நாம் இந்தியாவுக்கு அளித்த ஆதரவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசியதாக பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வியட்நாம் நாட்டின் புதிய பிரதமராக பாம் மின் சின் தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக அவரிடம் உரையாடினர்.

முதலில் பாம் மின் சின்-க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த மோடி, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்த பல்வேறு விஷயங்களை பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடல் விவகாரத்தில் உள்ள விரிவான விதிமுறைகளில் இரு நாடுகளுக்கும் தங்களது பார்வையை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன், கரோனா இரண்டாம் அலையின்போது வியட்நாம் நாட்டு அரசாங்கம், மக்கள் சார்பில் இந்தியாவுக்கு ஆதரவு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

அதேபோல் விரைவில் இந்தியாவுக்கு வருகை தருமாறும் அந்நாட்டு பிரதமர் பாம் மின் சின்-க்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்!

டெல்லி: வியட்நாம் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள பாம் மின் சின் உடன் தொலைபேசி மூலம் முதல் முறையாக உரையாடிய பிரதமர் மோடி, இந்திய பெருங்கடல் விவகாரம், கரோனா பேரிடர் காலத்தில் வியட்நாம் இந்தியாவுக்கு அளித்த ஆதரவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசியதாக பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வியட்நாம் நாட்டின் புதிய பிரதமராக பாம் மின் சின் தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக அவரிடம் உரையாடினர்.

முதலில் பாம் மின் சின்-க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த மோடி, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்த பல்வேறு விஷயங்களை பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடல் விவகாரத்தில் உள்ள விரிவான விதிமுறைகளில் இரு நாடுகளுக்கும் தங்களது பார்வையை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன், கரோனா இரண்டாம் அலையின்போது வியட்நாம் நாட்டு அரசாங்கம், மக்கள் சார்பில் இந்தியாவுக்கு ஆதரவு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

அதேபோல் விரைவில் இந்தியாவுக்கு வருகை தருமாறும் அந்நாட்டு பிரதமர் பாம் மின் சின்-க்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்!

Last Updated : Jul 11, 2021, 7:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.