ETV Bharat / bharat

மோடி அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் மூலம் 4 கோடி மாணவர்கள் பயனடைவர் - அமைச்சர் தாவர் சந்த்

author img

By

Published : Dec 29, 2020, 5:44 PM IST

பட்டியலின மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நான்கு கோடி மாணவர்கள் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட்
மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட்

டெல்லி: உயர் கல்வியில் பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் தன் பங்கினை 60 விழுக்காடாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நான்கு கோடி பட்டியலின மாணவர்கள் பயனடைவார்கள் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தாவர்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "பட்டியலின மாணவர்களுக்கான உதவித் தொகையில் மத்திய அரசு அதன் பங்கினை 60 விழுக்காடு அதாவது 59 ஆயிரத்து 48 கோடியாக உயர்த்த முடிவு செய்துள்ளது. மேலும் வரும் காலத்தில் இது 80 விழுக்காடாக உயர்த்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 கோடி மாணவர்கள் பயனடைவார்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆண்டொன்றுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாயை மத்திய அரசு செலவு செய்துள்ளது. ஆனால் அதனை மோடி தலைமையிலான அரசு மாற்றியமைத்துள்ளது. சில மாநிலங்களில் உதவித்தொகைகள் மாணவர்களுக்கு சென்றடையாமல் வேறு சில காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால் பட்டியலின மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.

இதனால் உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கே இனி நேரடியாக அனுப்பப்படும். மாநில அரசுகள் தங்களது பங்கினை மாணவர்களுக்கு வழங்கிய பின்னரே மத்திய அரசு தனது பங்கினை வழங்கும். இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவால் கல்வியின் தரம் மேம்படும். இந்தத் திட்டத்திற்கு இதுவரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

கடந்த 2014-2015 காலகட்டத்தில் உதவித்தொகை மூலம் பயனடையும் மாணவர்களின் விழுக்காடு 17லிருந்து 23ஆக அதிகரித்தது. தற்போது அதனை 27 விழுக்காடாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் உறுதி செய்யப்பட்ட உருமாறிய கரோனா பரவல்

டெல்லி: உயர் கல்வியில் பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் தன் பங்கினை 60 விழுக்காடாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நான்கு கோடி பட்டியலின மாணவர்கள் பயனடைவார்கள் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தாவர்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "பட்டியலின மாணவர்களுக்கான உதவித் தொகையில் மத்திய அரசு அதன் பங்கினை 60 விழுக்காடு அதாவது 59 ஆயிரத்து 48 கோடியாக உயர்த்த முடிவு செய்துள்ளது. மேலும் வரும் காலத்தில் இது 80 விழுக்காடாக உயர்த்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 கோடி மாணவர்கள் பயனடைவார்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆண்டொன்றுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாயை மத்திய அரசு செலவு செய்துள்ளது. ஆனால் அதனை மோடி தலைமையிலான அரசு மாற்றியமைத்துள்ளது. சில மாநிலங்களில் உதவித்தொகைகள் மாணவர்களுக்கு சென்றடையாமல் வேறு சில காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால் பட்டியலின மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.

இதனால் உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கே இனி நேரடியாக அனுப்பப்படும். மாநில அரசுகள் தங்களது பங்கினை மாணவர்களுக்கு வழங்கிய பின்னரே மத்திய அரசு தனது பங்கினை வழங்கும். இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவால் கல்வியின் தரம் மேம்படும். இந்தத் திட்டத்திற்கு இதுவரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

கடந்த 2014-2015 காலகட்டத்தில் உதவித்தொகை மூலம் பயனடையும் மாணவர்களின் விழுக்காடு 17லிருந்து 23ஆக அதிகரித்தது. தற்போது அதனை 27 விழுக்காடாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் உறுதி செய்யப்பட்ட உருமாறிய கரோனா பரவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.