ETV Bharat / bharat

குடும்ப தகராறில் மனைவி, மகள், மாமியாரை கத்தியால் குத்திய நபர் கைது

டெல்லியில் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி , மகள், மாமியாரை கத்தியால் தாக்கியுள்ளார்.

author img

By

Published : Aug 29, 2022, 11:55 AM IST

குடும்ப தகராறில் மனைவி மகள் மற்றும் மாமியாரை கத்தியால் குத்திய நபர்
குடும்ப தகராறில் மனைவி மகள் மற்றும் மாமியாரை கத்தியால் குத்திய நபர்

டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக 37 வயது நபர் அவரது மனைவி, மகள், மாமியாரை கத்தியால் தாக்கியதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சித்தார்த் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் தரப்பில், "சித்தார்த்துக்கும், அவரது மனைவி அதிதிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சித்தார்த் மனைவி அதிதி (37), எட்டு வயதுடைய மகள் மற்றும் மாமியார் மாயாதேவி ஆகியோரை கத்தியால் தாக்கியுள்ளார். இதான் மூவரையும் உறவினர்கள் நாராயணா மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து எங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் அவரை கைது செய்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது.

டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக 37 வயது நபர் அவரது மனைவி, மகள், மாமியாரை கத்தியால் தாக்கியதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சித்தார்த் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் தரப்பில், "சித்தார்த்துக்கும், அவரது மனைவி அதிதிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சித்தார்த் மனைவி அதிதி (37), எட்டு வயதுடைய மகள் மற்றும் மாமியார் மாயாதேவி ஆகியோரை கத்தியால் தாக்கியுள்ளார். இதான் மூவரையும் உறவினர்கள் நாராயணா மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து எங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் அவரை கைது செய்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:கேரளாவில் நிலச்சரிவு... ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு... 3 பேர் மாயம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.