ETV Bharat / bharat

துப்பாக்கி, 13 தோட்டாக்களுடன் விமான நிலையம் வந்த நபர்

author img

By

Published : Jan 4, 2021, 4:44 PM IST

கர்நாடக மாநிலத்திலுள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் அவருடைய கைப்பையில் ஒரு துப்பாக்கி மற்றும் அதற்கான 13 தோட்டாக்களை கொண்டு வந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Man carrying 13 bullets caught at Bengaluru Airport
Man carrying 13 bullets caught at Bengaluru Airport

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டத்தில் உள்ளது கெம்பகவுடா பன்னாட்டு விமான நிலையம். பெங்களூருவிலிருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த நந்தேஸ்வரன் என்ற நபரை வழக்கம்போல் விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் சோதனை செய்தனர்.

பின்னர் அவரது கைப்பையினை சோதனை செய்ததில் தோட்டா போன்ற பொருள் தென்பட்டது. இதையடுத்து, அவரது கைப்பையை சோதனை செய்ததில், துப்பாக்கி மற்றும் 13 தோட்டாக்களை இருந்தது கண்டறியப்பட்டது.

பின்னர் இது குறித்து அந்த நபரிடம் விமான நிலைய அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும், அவரிடம் துப்பாக்கிக்கு தேவையான ஆதாரங்கள் இருந்ததையடுத்து அவர் விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் செயல் தலைவர் கைப்பையில் தோட்டாக்கள்!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டத்தில் உள்ளது கெம்பகவுடா பன்னாட்டு விமான நிலையம். பெங்களூருவிலிருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த நந்தேஸ்வரன் என்ற நபரை வழக்கம்போல் விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் சோதனை செய்தனர்.

பின்னர் அவரது கைப்பையினை சோதனை செய்ததில் தோட்டா போன்ற பொருள் தென்பட்டது. இதையடுத்து, அவரது கைப்பையை சோதனை செய்ததில், துப்பாக்கி மற்றும் 13 தோட்டாக்களை இருந்தது கண்டறியப்பட்டது.

பின்னர் இது குறித்து அந்த நபரிடம் விமான நிலைய அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும், அவரிடம் துப்பாக்கிக்கு தேவையான ஆதாரங்கள் இருந்ததையடுத்து அவர் விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் செயல் தலைவர் கைப்பையில் தோட்டாக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.