டெல்லி: மேற்குவங்கத்தில் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.
தற்போது, அத்தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், வகுப்பு வாரியாக தேர்வானவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஓபிசி -அ இடஒதுக்கீட்டில் தேர்வானவர்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் என்பதை சுட்டிக்காட்டி, இந்துக்களின் ஓபிசி இடஒதுக்கீட்டை மம்தா அரசு மறுத்துள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அக்கட்சியின் தேசியப் பொறுப்பாளர் மால்வியா, ஓபிசி-அ(மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) பிரிவில் உள்ள 80 சமூகங்களில் இஸ்லாமிய சமூகங்கள் 72 உள்ளன என்றும், ஓபிசி-ஆ (பிற்படுத்தப்பட்டோர்) பிரிவில் 40 இஸ்லாமிய சமூகங்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓபிசி பிரிவில், இஸ்லாமியர்களுக்கு அதிகப்படியான பிரதிநிதித்துவம் அளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'பாஜக தொண்டர்கள் மேற்குவங்கம் செல்ல தயாராக இருக்க வேண்டும்' - அண்ணாமலை