ETV Bharat / bharat

அரசு விமானத்தில் ஏற மகாராஷ்டிரா ஆளுநருக்கு அனுமதி மறுப்பு!

author img

By

Published : Feb 11, 2021, 3:09 PM IST

மும்பை: அரசு விமானத்தில் ஏறி பயணிக்க மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகத்சிங்
Bhagat Singh

உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்ள, மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி முடிவு செய்தார். இதற்காக நேற்றிரவு 9 மணிக்கு விமான நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்த அரசு விமானத்தில் பயணிக்க ஆளுநர் சென்றபோது, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முறையான தகவல்கள் இதுவரை வரவில்லை என விமான நிலைய அலுவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் வேறு வழியின்றி தனியார் விமானத்தில் ஆளுநர் சென்றுள்ளார். இச்சம்பவத்தால் அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்ள, மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி முடிவு செய்தார். இதற்காக நேற்றிரவு 9 மணிக்கு விமான நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்த அரசு விமானத்தில் பயணிக்க ஆளுநர் சென்றபோது, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முறையான தகவல்கள் இதுவரை வரவில்லை என விமான நிலைய அலுவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் வேறு வழியின்றி தனியார் விமானத்தில் ஆளுநர் சென்றுள்ளார். இச்சம்பவத்தால் அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: தடுப்பூசி வேண்டும்: மோடிக்கு கால் செய்த ஜஸ்டின் ட்ரூடோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.