மகாராஷ்டிரா: ஆட்டோ ஓட்டுநர் தன்னுடன் தவறாக பேசியதால் ஓடும் ஆட்டோவை விட்டு பள்ளி மாணவி ஒருவர் கீழே குதித்தச் சம்பவம் நடந்தேறியுள்ளது. இதுகுறித்து கிராண்டி சௌக் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும், மாணவியிடம் வக்கிரமான பேச்சுவார்த்தையைத் தொடங்கிய சையது அக்பர் எனும் ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில், “கடந்த நவ.13ஆம் தேதி இச்சம்பவம் நடந்தேறியது. தனது நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை முடித்து விட்டு வந்த 18 வயதே நிரம்பிய அந்த மாணவி அன்று ஆட்டோவில் தன் வீடு திரும்பவிருந்தார். வழக்கமாக தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் தந்தையும், அண்ணனும் அன்று வராததால் மாணவியே ஆட்டோவில் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநரான சையது அக்பர் தன்னிடம் வக்கிரமான பேச ஆரம்பித்ததும் அதைப் பொருத்துக்கொள்ள முடியாத மாணவி, ஆட்டோவை விட்டு கீழே குதித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அதில், ஆட்டோ ஓட்டுநரான சையது அக்பர் ஆட்டோவை ஓட்ட ஆரம்பித்ததும் தவறான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதாகவும், இதனால் அச்சுறுத்தலுக்குள்ளானதால் ஆட்டொவை விட்டு வெளியே குதித்ததாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓடும் ஆட்டோவிலிருந்து மாணவி குதிக்கும் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் அக்பரை கைது செய்து அவரது ஆட்டோவையும் பறிமுதல் செய்த்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த சையது அக்பருக்கு மூன்று பெண் குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சன்னி லியோனுக்கு எதிரான பண மோசடி வழக்கு; கேரள உயர் நீதிமன்றம் அதிரடி