ETV Bharat / bharat

குற்றவியல் நடைமுறை மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

author img

By

Published : Apr 6, 2022, 6:50 AM IST

குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்ட கைதிகள் மற்றும் குற்றவாளிகளின் உயிரியல் மாதிரிகளை எடுத்து பரிசோதிக்க காவல்துறையினருக்கு அனுமதி அளிக்கும் குற்றவியல் மசோதாவிற்கு திங்கள் (ஏப்ரல் 4) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறை மசோதவுக்கு மக்களவையில் ஒப்புதல்; சட்டத்தை மதிப்பவர்களுக்கு பாதுகாப்பு- அமித்ஷா
குற்றவியல் நடைமுறை மசோதவுக்கு மக்களவையில் ஒப்புதல்; சட்டத்தை மதிப்பவர்களுக்கு பாதுகாப்பு- அமித்ஷா

டெல்லி: குற்றச்செயல்களில் குற்றஞ்சாட்டப்படுவர்களின் உயிரியல் மாதிரிகளை பரிசோதிக்க எடுப்பதற்கான உரிமையை காவல்துறைக்கு கொடுக்கும் குற்றவியல் மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் சட்டத்தை மதிக்கும் பொது மக்களின் உரிமைகளை இந்த மசோதா பாதுகாக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஆனால் இந்த மசோதா தனிமனித உரிமைகளை பாதிக்கும் என சில எதிர் கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கிரிமினல் விவகாரங்களில் விசாரணைக்காக குற்றவாளிகள் மற்றும் கைதிகளின் உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளைப் பெற காவல்துறைக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கும் சர்ச்சைக்குரிய மசோதா திங்களன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, உள்துறை அமைச்சர் அமித் ஷா இது சட்டத்தின் மனித உரிமைகளின் பாதுகாவலராக செயல்படும் என்று கூறியுள்ளார்.

நிலையான குடிமக்களின் உரிமைகளான இந்த சட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட அனைத்து தரவுகளும் பாதுகாக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் 1920 ஆம் ஆண்டு கைதிகள் உரிமை தொடர்பான சட்டத்தை மாற்ற இந்த மசோதா முற்படும் எனவும் தெரிவித்தார்.

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஷா, மசோதாவில் உள்ள ஒரு விதியை மேற்கோள் காட்டி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்கள் அல்லது ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இந்த மசோதா கட்டாயம் இல்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

இதையும் படிங்க:22 யூ-ட்யூப் சேனல்களுக்குத் தடை- தவறான செய்தி பரப்பியதால் நடவடிக்கை!

டெல்லி: குற்றச்செயல்களில் குற்றஞ்சாட்டப்படுவர்களின் உயிரியல் மாதிரிகளை பரிசோதிக்க எடுப்பதற்கான உரிமையை காவல்துறைக்கு கொடுக்கும் குற்றவியல் மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் சட்டத்தை மதிக்கும் பொது மக்களின் உரிமைகளை இந்த மசோதா பாதுகாக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஆனால் இந்த மசோதா தனிமனித உரிமைகளை பாதிக்கும் என சில எதிர் கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கிரிமினல் விவகாரங்களில் விசாரணைக்காக குற்றவாளிகள் மற்றும் கைதிகளின் உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளைப் பெற காவல்துறைக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கும் சர்ச்சைக்குரிய மசோதா திங்களன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, உள்துறை அமைச்சர் அமித் ஷா இது சட்டத்தின் மனித உரிமைகளின் பாதுகாவலராக செயல்படும் என்று கூறியுள்ளார்.

நிலையான குடிமக்களின் உரிமைகளான இந்த சட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட அனைத்து தரவுகளும் பாதுகாக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் 1920 ஆம் ஆண்டு கைதிகள் உரிமை தொடர்பான சட்டத்தை மாற்ற இந்த மசோதா முற்படும் எனவும் தெரிவித்தார்.

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஷா, மசோதாவில் உள்ள ஒரு விதியை மேற்கோள் காட்டி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்கள் அல்லது ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இந்த மசோதா கட்டாயம் இல்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

இதையும் படிங்க:22 யூ-ட்யூப் சேனல்களுக்குத் தடை- தவறான செய்தி பரப்பியதால் நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.