ETV Bharat / bharat

முதலாளிகளின் நன்மைகளுக்காக நடக்கும் பெரிய சதி: வேளாண் சட்டங்கள் குறித்து சித்து ட்வீட்

author img

By

Published : May 28, 2021, 10:43 PM IST

புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் பஞ்சாப்பின் விவசாயத்தை அழித்து, இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை சில முதலாளிகளிடம் வழங்கும் பெரிய சதியின் ஒரு பகுதியாக உள்ளது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-வுமான சித்து ட்வீட் செய்துள்ளார்.

Larger conspiracy to benefit capitalists: Sidhu on farm laws
முதலாளிகளின் நன்மைகளுக்காக நடக்கும் பெரிய சதி: வேளாண் சட்டங்கள் குறித்து சித்து ட்வீட்

பாட்டியாலா(பஞ்சாப்): இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை சித்து வெளியிட்டுள்ளார். அதில், " குறைந்த பட்ச ஆதரவு விலை புதிய வேளாண் சட்டங்களில் ஓர் அங்கமாக இருக்கவேண்டும். பருப்பு, எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள், பழங்களை அரசு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவேண்டும். இதன்மூலம், மாநில அரசின் உதவியுடன் மூன்று கோடி பஞ்சாபியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்.

விவசாயிகளுக்கு அளிப்பதற்கு மாநில அரசிடம் வளம் இல்லை என்றால், மணல் மாஃபியா, கேபிள் மாஃபியா போன்ற மாஃபியாக்களை ஒடுக்கினால், மாநில அரசுக்கு வளம் கிடைக்கும். இவையனைத்தையும் ஒன்றிய அரசின் உதவி இல்லாமலே மாநில அரசே செய்யமுடியும். புதிய வேளாண் சட்டங்கள் பஞ்சாப்பின் விவசாயத்தை அழிக்கும் பெரிய சதியின் ஓர் அங்கம். இச்சட்டங்கள், சில முதலாளிகளுக்கு இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை தாரை வார்க்கின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Farm Laws are part of a larger strategy to destroy Punjab’s Agriculture & hand-over India’s Food Security to a chosen few Capitalist, Even if repealed - their plan may succeed. Until & Unless, State of Punjab does not give assured MSP & Storage Capacity in hands of the farmers !! pic.twitter.com/2iZcKJwZo1

    — Navjot Singh Sidhu (@sherryontopp) May 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் ஆனதை கறுப்பு தினமாக அறிவித்து விவசாயிகள் போராட்டத்தை நடத்தினர். அந்தப்போராட்டத்தில் சித்து கலந்துகொண்டதோடு தனது வீட்டிலும் கறுப்புக்கொடி ஏற்றி பாஜக அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'புதிய வேளாண் திருத்தச்சட்டங்கள் உடனடியாக திரும்பப் பெறவேண்டும்' -மெகபூபா முப்தி!

பாட்டியாலா(பஞ்சாப்): இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை சித்து வெளியிட்டுள்ளார். அதில், " குறைந்த பட்ச ஆதரவு விலை புதிய வேளாண் சட்டங்களில் ஓர் அங்கமாக இருக்கவேண்டும். பருப்பு, எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள், பழங்களை அரசு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவேண்டும். இதன்மூலம், மாநில அரசின் உதவியுடன் மூன்று கோடி பஞ்சாபியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்.

விவசாயிகளுக்கு அளிப்பதற்கு மாநில அரசிடம் வளம் இல்லை என்றால், மணல் மாஃபியா, கேபிள் மாஃபியா போன்ற மாஃபியாக்களை ஒடுக்கினால், மாநில அரசுக்கு வளம் கிடைக்கும். இவையனைத்தையும் ஒன்றிய அரசின் உதவி இல்லாமலே மாநில அரசே செய்யமுடியும். புதிய வேளாண் சட்டங்கள் பஞ்சாப்பின் விவசாயத்தை அழிக்கும் பெரிய சதியின் ஓர் அங்கம். இச்சட்டங்கள், சில முதலாளிகளுக்கு இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை தாரை வார்க்கின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Farm Laws are part of a larger strategy to destroy Punjab’s Agriculture & hand-over India’s Food Security to a chosen few Capitalist, Even if repealed - their plan may succeed. Until & Unless, State of Punjab does not give assured MSP & Storage Capacity in hands of the farmers !! pic.twitter.com/2iZcKJwZo1

    — Navjot Singh Sidhu (@sherryontopp) May 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் ஆனதை கறுப்பு தினமாக அறிவித்து விவசாயிகள் போராட்டத்தை நடத்தினர். அந்தப்போராட்டத்தில் சித்து கலந்துகொண்டதோடு தனது வீட்டிலும் கறுப்புக்கொடி ஏற்றி பாஜக அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'புதிய வேளாண் திருத்தச்சட்டங்கள் உடனடியாக திரும்பப் பெறவேண்டும்' -மெகபூபா முப்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.