ETV Bharat / bharat

அமைச்சரவை விரிவாக்கம்: நட்டாவைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சர்

author img

By

Published : Aug 3, 2021, 7:20 AM IST

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவைச் சந்தித்து இது குறித்து விவாதித்துள்ளார்.

நட்டாவைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சர்
நட்டாவைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சர்

பாரதிய ஜனதா கட்சியில் 75 வயதை நிறைவுசெய்தவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால், எடியூரப்பாவுக்கு 75 வயதைக் கடந்தும் முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது, அவரிடம் இரண்டு ஆண்டுகள் கழித்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சித் தலைமை நிபந்தனை விதித்தது. அவரும் அதனை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி, ஜூலை 26ஆம் தேதியுடன் அவருக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு ஆண்டு காலம் முடிவடைந்தது. முன்னதாக ஜூலை 16இல் டெல்லி சென்ற அவர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் இது குறித்து விவாதித்தார்.

தலைவர்களுடனான சந்திப்பு
தலைவர்களுடனான சந்திப்பு

இதையடுத்து, அவர் கொடுத்த வாக்குறுதியின்படி தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து பசவராஜ் பொம்மை முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆகியோருடன் பசவராஜ் பொம்மையின் சந்திப்பு நிகழ்ந்தது.

இந்த நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கு முன்னதாக நேற்று (ஆகஸ்ட் 2) பசவராஜ் பொம்மை பாஜக தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவைச் சந்தித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ஜெ.பி. நட்டாவுடன் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விரிவாக விவாதித்தேன். மேலும், மாநிலத்தின் அடிப்படை நிலவரம் குறித்தும் அவரிடம் விளக்கினேன். நாங்கள் நம்பகமான, செயல்திறன்மிக்க அமைச்சரவையைக் கொடுக்க விரும்புகிறோம்.

நட்டாவைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சர்
நட்டாவைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சர்

நாளை இரவுக்குள் (ஆகஸ்ட் 3) அவர்கள் (கட்சித் தலைமை) இறுதிப் பட்டியலைக் கொடுக்கலாம். அதை கட்சியின் உயர்மட்டக் குழுவினர் வழங்குவர்" என்றார்.

இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் கரோனா: நாளை அமைச்சரவைக் கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியில் 75 வயதை நிறைவுசெய்தவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால், எடியூரப்பாவுக்கு 75 வயதைக் கடந்தும் முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது, அவரிடம் இரண்டு ஆண்டுகள் கழித்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சித் தலைமை நிபந்தனை விதித்தது. அவரும் அதனை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி, ஜூலை 26ஆம் தேதியுடன் அவருக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு ஆண்டு காலம் முடிவடைந்தது. முன்னதாக ஜூலை 16இல் டெல்லி சென்ற அவர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் இது குறித்து விவாதித்தார்.

தலைவர்களுடனான சந்திப்பு
தலைவர்களுடனான சந்திப்பு

இதையடுத்து, அவர் கொடுத்த வாக்குறுதியின்படி தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து பசவராஜ் பொம்மை முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆகியோருடன் பசவராஜ் பொம்மையின் சந்திப்பு நிகழ்ந்தது.

இந்த நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கு முன்னதாக நேற்று (ஆகஸ்ட் 2) பசவராஜ் பொம்மை பாஜக தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவைச் சந்தித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ஜெ.பி. நட்டாவுடன் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விரிவாக விவாதித்தேன். மேலும், மாநிலத்தின் அடிப்படை நிலவரம் குறித்தும் அவரிடம் விளக்கினேன். நாங்கள் நம்பகமான, செயல்திறன்மிக்க அமைச்சரவையைக் கொடுக்க விரும்புகிறோம்.

நட்டாவைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சர்
நட்டாவைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சர்

நாளை இரவுக்குள் (ஆகஸ்ட் 3) அவர்கள் (கட்சித் தலைமை) இறுதிப் பட்டியலைக் கொடுக்கலாம். அதை கட்சியின் உயர்மட்டக் குழுவினர் வழங்குவர்" என்றார்.

இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் கரோனா: நாளை அமைச்சரவைக் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.