மும்பை: ஜியோ நெட்வொர்க்கிலிருந்து புதிய அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும், பிற எண்களிலிருந்து அழைப்பு வரவில்லை என்றும் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் ஜியோ டூ ஜியோவுக்குகூட அழைப்புகள் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை மும்பை புறநகரின் அனைத்துப் பகுதிகளிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக கல்யாண், டோம்பிவிலி, தானே ஆகிய பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டுவருகின்றனர். ஆனால் இந்த நெட்வொர்க் பிரச்சினை குறித்து ஜியோ நிறுவனம், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்போ தீர்வோ வெளியிடவில்லை.