ஜம்மு காஷ்மீர்: சோபியான் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் உதவி ஆய்வாளர் ஷபிர் அஹமத், நேற்று (பிப்ரவரி 1) பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிய நிலையில் அவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் காயமடைந்த அவர் ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருவதாக காஷ்மீர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குல்காமில் பிரிவினைவாதிகள் மூவர் சுட்டுக்கொலை