டுப்லின்: கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரோனாவைத் தடுக்கும்விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.
கரோனா வைரசை (தீநுண்மி) தடுக்கும்விதமாக இந்தியாவுக்கு உதவும் சர்வதேச நாடுகளில் தற்போது அயர்லாந்தும் இணைந்துள்ளது. அதன்படி, அயர்லாந்து இந்தியாவுக்கு ஆக்சிஜன், வென்டிலேட்டர்களை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான தீரா வன்கொடுமை: அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!