ETV Bharat / bharat

எல்லை தாண்டிய காதல் - காதலரை சந்திக்க பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்!

author img

By

Published : Jul 24, 2023, 11:48 AM IST

Updated : Jul 24, 2023, 12:09 PM IST

இந்தியாவை சேர்ந்த அஞ்சு மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா இடையே ஆன காதல் உணர்வு, திருமண பந்தத்தில் இருந்த அஞ்சுவை, பாகிஸ்தான் நோக்கி செல்ல வைத்து உள்ளது.

எல்லை தாண்டிய காதல் - காதலரை சந்திக்க பாகிஸ்தான் சென்ற இந்திய பெண் !
எல்லை தாண்டிய காதல் - காதலரை சந்திக்க பாகிஸ்தான் சென்ற இந்திய பெண் !

பிவாடி (ராஜஸ்தான்): காதலனைச் சந்திப்பதற்காக நான்கு குழந்தைகளுடன் எல்லையைத் தாண்டிய பாகிஸ்தான் பெண் சீமா ஹைதரின் நோக்கத்தைக் கண்டறிய இந்திய அரசு இருளில் மூழ்கி உள்ள நிலையில், அந்த நிகழ்விற்கு நேர்மாறாக, ராஜஸ்தான் மாநிலம் பிவாடியைச் சேர்ந்த 34 வயது பெண்பாகிஸ்தானின் லாகூரில் வசிக்கும் மருத்துவப் துறையில் பணியாற்றி வரும், நஸ்ருல்லா என்ற இளைஞருடன் கடந்த சில ஆண்டுகளாக சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பில் இருந்து உள்ளார். அவர்களின் உறவின் ஆழம் அடைந்த நிலையில், அஞ்சுவை, பாகிஸ்தானில் உள்ள நஸ்ருல்லாவை சந்திக்க, எல்லை தாண்டி செல்ல வைத்து உள்ளது.

இந்த அசாதாரண காதல் கதையின் புதிரை காவல்துறையினர் ஒன்றிணைக்க முயற்சித்தாலும், எல்லை மீறும் அஞ்சுவின் நோக்கம் குறித்து அவர்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அஞ்சுவின் கணவரான அரவிந்த், டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக உள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மனைவியின் உள்நோக்கம் குறித்து, அவருக்கு மிகக் குறைந்த அளவே தெரிந்துள்ளது என்பது, போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது.

பத்திரிகையாளர்களை சந்தித்த அரவிந்த் கூறியதாவது, “அவள் ஜெய்ப்பூர் சுற்றுலா செல்வதாகத் தான் என்னிடம் கூறி இருந்தாள், ஆனால் அவள் காதலனை சந்திக்க பாகிஸ்தானுக்கு சென்று உள்ளார் என்பது எனக்குத் தெரியாது. இரு சக்கர வாகன நிறுவனத்தில் வேலை பார்த்து மகிழ்ச்சியாகத் தான் வாழ்ந்து வந்தார். என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவள் விரைவில் திரும்பி வருவாள் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையில், போலீசார் நடத்திய விசாரணையில் அஞ்சு மற்றும் நஸ்ருல்லாவின் தொடர்பு பற்றிய நிகழ்வு அம்பலமாகி உள்ளது. இருவரும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருந்து வந்து உள்ளனர். சமூக ஊடகங்களில் இவர்கள் விர்சுவல் முறையில் இணைந்து மேற்கொண்ட பல மணிநேர இதயப்பூர்வமான உரையாடல்கள் மூலம் அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. அவர்களின் பிணைப்பு மேலும் வலுப்பெற்ற நிலையில், நஸ்ருல்லாவை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலின் காரணமாக, அஞ்சு பாகிஸ்தானை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள தூண்டிவிட்டு உள்ளது.

இந்நிலையில், அஞ்சு ஜூலை 21ஆம் தேதி சுற்றுலா விசாவில் பாகிஸ்தானுக்கு வந்ததும் போலீஸாருக்குத் தெரியவந்து உள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இருந்து தங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது, தற்போது அஞ்சு மற்றும் நஸ்ருல்லாவிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஒரு காலத்தில் திர் மாவட்டத்தில் ஆசிரியராக இருந்த நஸ்ருல்லா, தற்போது மருந்துகள் விற்பனைபிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். அவர்களின் காதல் கதை எல்லைகளைத் தாண்டி, தடைகளைத் தாண்டி, அவர்களின் கலாச்சார-கலாச்சார பிணைப்பின் தனித்துவத்தைத் தழுவியதாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் அறிவியல் ரீதியான ஆய்வை துவக்கியது இந்திய தொல்லியல் துறை!

பிவாடி (ராஜஸ்தான்): காதலனைச் சந்திப்பதற்காக நான்கு குழந்தைகளுடன் எல்லையைத் தாண்டிய பாகிஸ்தான் பெண் சீமா ஹைதரின் நோக்கத்தைக் கண்டறிய இந்திய அரசு இருளில் மூழ்கி உள்ள நிலையில், அந்த நிகழ்விற்கு நேர்மாறாக, ராஜஸ்தான் மாநிலம் பிவாடியைச் சேர்ந்த 34 வயது பெண்பாகிஸ்தானின் லாகூரில் வசிக்கும் மருத்துவப் துறையில் பணியாற்றி வரும், நஸ்ருல்லா என்ற இளைஞருடன் கடந்த சில ஆண்டுகளாக சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பில் இருந்து உள்ளார். அவர்களின் உறவின் ஆழம் அடைந்த நிலையில், அஞ்சுவை, பாகிஸ்தானில் உள்ள நஸ்ருல்லாவை சந்திக்க, எல்லை தாண்டி செல்ல வைத்து உள்ளது.

இந்த அசாதாரண காதல் கதையின் புதிரை காவல்துறையினர் ஒன்றிணைக்க முயற்சித்தாலும், எல்லை மீறும் அஞ்சுவின் நோக்கம் குறித்து அவர்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அஞ்சுவின் கணவரான அரவிந்த், டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக உள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மனைவியின் உள்நோக்கம் குறித்து, அவருக்கு மிகக் குறைந்த அளவே தெரிந்துள்ளது என்பது, போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது.

பத்திரிகையாளர்களை சந்தித்த அரவிந்த் கூறியதாவது, “அவள் ஜெய்ப்பூர் சுற்றுலா செல்வதாகத் தான் என்னிடம் கூறி இருந்தாள், ஆனால் அவள் காதலனை சந்திக்க பாகிஸ்தானுக்கு சென்று உள்ளார் என்பது எனக்குத் தெரியாது. இரு சக்கர வாகன நிறுவனத்தில் வேலை பார்த்து மகிழ்ச்சியாகத் தான் வாழ்ந்து வந்தார். என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவள் விரைவில் திரும்பி வருவாள் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையில், போலீசார் நடத்திய விசாரணையில் அஞ்சு மற்றும் நஸ்ருல்லாவின் தொடர்பு பற்றிய நிகழ்வு அம்பலமாகி உள்ளது. இருவரும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருந்து வந்து உள்ளனர். சமூக ஊடகங்களில் இவர்கள் விர்சுவல் முறையில் இணைந்து மேற்கொண்ட பல மணிநேர இதயப்பூர்வமான உரையாடல்கள் மூலம் அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. அவர்களின் பிணைப்பு மேலும் வலுப்பெற்ற நிலையில், நஸ்ருல்லாவை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலின் காரணமாக, அஞ்சு பாகிஸ்தானை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள தூண்டிவிட்டு உள்ளது.

இந்நிலையில், அஞ்சு ஜூலை 21ஆம் தேதி சுற்றுலா விசாவில் பாகிஸ்தானுக்கு வந்ததும் போலீஸாருக்குத் தெரியவந்து உள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இருந்து தங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது, தற்போது அஞ்சு மற்றும் நஸ்ருல்லாவிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஒரு காலத்தில் திர் மாவட்டத்தில் ஆசிரியராக இருந்த நஸ்ருல்லா, தற்போது மருந்துகள் விற்பனைபிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். அவர்களின் காதல் கதை எல்லைகளைத் தாண்டி, தடைகளைத் தாண்டி, அவர்களின் கலாச்சார-கலாச்சார பிணைப்பின் தனித்துவத்தைத் தழுவியதாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் அறிவியல் ரீதியான ஆய்வை துவக்கியது இந்திய தொல்லியல் துறை!

Last Updated : Jul 24, 2023, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.