ETV Bharat / bharat

’ஸ்புட்னி வி’ தடுப்பூசி: ஆண்டுக்கு 85 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யவுள்ள இந்தியா!

author img

By

Published : Apr 13, 2021, 2:38 PM IST

’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கும் 60ஆவது நாடாக இந்தியா மாறியுள்ளது. உலக மக்கள்தொகையில் சுமார் 40 விழுக்காட்டினர் அல்லது 300 கோடி நபர்களை இந்தத் தடுப்பூசி சென்றடைய உள்ளது.

ஸ்புட்னிக் வி
ஸ்புட்னிக் வி

கரோனா வைரஸுக்கு எதிரான் போரில், ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும் 60ஆவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (The Russian Direct Investment Fund) தெரிவித்துள்ளது. மேலும், வரும் நாள்களில் ஆண்டுதோறும் 85 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் ஆர்டிஐஎஃப் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ’ஸ்புட்னிக் வி’ பயன்பாட்டுக்கு ஒப்புதல்

ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி தொடர்பான மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள், டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுடன் இணைந்து இந்தியாவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட உள்ளூர் மருத்துவப் பரிசோதனைகளில் பெறப்பட்ட நேர்மறையான முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது அவசரகால அடிப்படையில் இந்தியாவில் இம்மருந்தைப் பயன்படுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

உலக மக்கள்தொகையில் சுமார் 40 விழுக்காட்டினர் அல்லது 300 கோடி நபர்களை இந்தத் தடுப்பூசி சென்றடைய உள்ளது. இந்நிலையில், ’ஸ்புட்னிக் வி’க்கு ஒப்புதல் அளிக்கும் 60ஆவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக ஆர்டிஐஎஃப் குறிப்பிட்டுள்ளது. மேலும், தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ள அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் முன்னணி உற்பத்தி மையமாகவும் இந்தியா திகழ்வதாகவும் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி பயன்பாட்டில் முக்கிய மைல்கல்

இந்தியாவில் ’ஸ்பூட்னிக் வி’யின் மருத்துவப் பரிசோதனைகள், உள்ளூர் உற்பத்தி ஆகியவற்றில் இந்தியா- ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் விரிவான ஒத்துழைப்பை வளர்த்து வரும் நிலையில், இந்த முடிவு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக RDIF தலைமை நிர்வாக அலுவலர் கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உலகின் பழமையான, புகழ்பெற்ற மருத்துவப் பத்திரிகைகளில் ஒன்றான லான்செட்டில், ’ஸ்பூட்னிக் வி’ 91.6 விழுக்காடு செயல்திறன் கொண்டு கரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றுவதாக குறிப்பிட்டிருந்தது.

இதையும் படிங்க: ’ஸ்புட்னிக் V’ இறக்குமதி செய்ய டாக்டர் ரெட்டி ஆய்வகத்துக்கு அனுமதி

இதனை மேற்கோள் காட்டியுள்ள அவர், "உலக அளவில் 425 மில்லியனுக்கும் (42.5 கோடி பேர்) அதிகமான மக்களுக்கு விநியோகிக்கும் வகையில், இந்தியாவில் ஆண்டுதோறும் 850 மில்லியன் (85 கோடி) அதிகமான டோஸ்கள் ’ஸ்புட்னிக் வி’ தயாரிக்கப்பட உள்ளது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்சமயம், இந்தியாவின் க்ளாண்ட் பார்மா, ஹெட்ரோ பயோ பார்மா, பனெசியா பயோடெக், ஸ்டெலிஸ் பயோ பார்மா, விர்ச்சோ பயோடெக் ஆகிய நிறுவனங்களுடன் ஆர்டிஐஎஃப் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள மூன்றாவது தடுப்பூசி

இந்தியாவில் கரோனா வைரஸுக்கு எதிராக பயன்படுத்தப்படும் மூன்றாவது தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி இருக்கும். முன்னதாக பாரத் பயோடெக்கின் கோவாக்சின், ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா, புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி வழங்கியிருந்தது.

ஆர்.டி.ஐ.எஃப்பின் கூற்றுபடி, ’ஸ்புட்னிக் வி’ பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது, குறிப்பாக இதில் வலுவான ஒவ்வாமை எதுவும் ஏற்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

இந்தத் தடுப்பூசியின் விலை ஷாட் ஒன்று 10 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக (இந்திய மதிப்பில் 754 ரூபாய்) உள்ளது. தடுப்பூசியின் இரண்டு கோர்ஸ்களும் ஒரே விநியோக முறையைப் பயன்படுத்திய செலுத்தப்படுவதாகவும், இது நீண்ட காலத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஸ்புட்னிக் வி’ பயன்பாட்டில் உள்ள நாடுகள்

அர்ஜென்டினா, பொலிவியா, ஹங்கேரி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், மெக்ஸிகோ, பாகிஸ்தான், பஹ்ரைன், இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளும் ஸ்புட்னிக் வி உபயோகத்திற்கு தற்சமயம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிங்கிள் டோஸில் கரோனாவைத் தடுக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி!

கரோனா வைரஸுக்கு எதிரான் போரில், ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும் 60ஆவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (The Russian Direct Investment Fund) தெரிவித்துள்ளது. மேலும், வரும் நாள்களில் ஆண்டுதோறும் 85 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் ஆர்டிஐஎஃப் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ’ஸ்புட்னிக் வி’ பயன்பாட்டுக்கு ஒப்புதல்

ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி தொடர்பான மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள், டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுடன் இணைந்து இந்தியாவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட உள்ளூர் மருத்துவப் பரிசோதனைகளில் பெறப்பட்ட நேர்மறையான முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது அவசரகால அடிப்படையில் இந்தியாவில் இம்மருந்தைப் பயன்படுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

உலக மக்கள்தொகையில் சுமார் 40 விழுக்காட்டினர் அல்லது 300 கோடி நபர்களை இந்தத் தடுப்பூசி சென்றடைய உள்ளது. இந்நிலையில், ’ஸ்புட்னிக் வி’க்கு ஒப்புதல் அளிக்கும் 60ஆவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக ஆர்டிஐஎஃப் குறிப்பிட்டுள்ளது. மேலும், தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ள அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் முன்னணி உற்பத்தி மையமாகவும் இந்தியா திகழ்வதாகவும் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி பயன்பாட்டில் முக்கிய மைல்கல்

இந்தியாவில் ’ஸ்பூட்னிக் வி’யின் மருத்துவப் பரிசோதனைகள், உள்ளூர் உற்பத்தி ஆகியவற்றில் இந்தியா- ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் விரிவான ஒத்துழைப்பை வளர்த்து வரும் நிலையில், இந்த முடிவு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக RDIF தலைமை நிர்வாக அலுவலர் கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உலகின் பழமையான, புகழ்பெற்ற மருத்துவப் பத்திரிகைகளில் ஒன்றான லான்செட்டில், ’ஸ்பூட்னிக் வி’ 91.6 விழுக்காடு செயல்திறன் கொண்டு கரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றுவதாக குறிப்பிட்டிருந்தது.

இதையும் படிங்க: ’ஸ்புட்னிக் V’ இறக்குமதி செய்ய டாக்டர் ரெட்டி ஆய்வகத்துக்கு அனுமதி

இதனை மேற்கோள் காட்டியுள்ள அவர், "உலக அளவில் 425 மில்லியனுக்கும் (42.5 கோடி பேர்) அதிகமான மக்களுக்கு விநியோகிக்கும் வகையில், இந்தியாவில் ஆண்டுதோறும் 850 மில்லியன் (85 கோடி) அதிகமான டோஸ்கள் ’ஸ்புட்னிக் வி’ தயாரிக்கப்பட உள்ளது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்சமயம், இந்தியாவின் க்ளாண்ட் பார்மா, ஹெட்ரோ பயோ பார்மா, பனெசியா பயோடெக், ஸ்டெலிஸ் பயோ பார்மா, விர்ச்சோ பயோடெக் ஆகிய நிறுவனங்களுடன் ஆர்டிஐஎஃப் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள மூன்றாவது தடுப்பூசி

இந்தியாவில் கரோனா வைரஸுக்கு எதிராக பயன்படுத்தப்படும் மூன்றாவது தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி இருக்கும். முன்னதாக பாரத் பயோடெக்கின் கோவாக்சின், ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா, புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி வழங்கியிருந்தது.

ஆர்.டி.ஐ.எஃப்பின் கூற்றுபடி, ’ஸ்புட்னிக் வி’ பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது, குறிப்பாக இதில் வலுவான ஒவ்வாமை எதுவும் ஏற்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

இந்தத் தடுப்பூசியின் விலை ஷாட் ஒன்று 10 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக (இந்திய மதிப்பில் 754 ரூபாய்) உள்ளது. தடுப்பூசியின் இரண்டு கோர்ஸ்களும் ஒரே விநியோக முறையைப் பயன்படுத்திய செலுத்தப்படுவதாகவும், இது நீண்ட காலத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஸ்புட்னிக் வி’ பயன்பாட்டில் உள்ள நாடுகள்

அர்ஜென்டினா, பொலிவியா, ஹங்கேரி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், மெக்ஸிகோ, பாகிஸ்தான், பஹ்ரைன், இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளும் ஸ்புட்னிக் வி உபயோகத்திற்கு தற்சமயம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிங்கிள் டோஸில் கரோனாவைத் தடுக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.