டெல்லி: கரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமெடுத்துவரும் சூழலில், கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்பட்டுவருகிறது.
இதனால், அம்மருந்தின் விலை கள்ளச்சந்தையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு தடைவிதித்தது.
இந்நிலையில் அம்மருந்து தயாரிக்கும் பொருள்களின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்கும் பொருள்களின் மீதான இறக்குமதி வரி நீக்கப்படுகிறது.
மருந்து தயாரிக்கப்பட்டு செலுத்துவதற்குத் தயாராக உள்ள ஊசிகள் மீதான வரியும் நீக்கப்படுகிறது. இந்த வரி விலக்கு, இந்தாண்டு அக்டோபர் 31ஆம் தேதிவரை தொடரும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசியல் கட்சிகள் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி விநியோகிக்க முடியுமா?