ETV Bharat / bharat

லுகேமியா நோயிக்கு விலை குறைந்த மருந்தை கண்டறிய இந்தூர் ஐஐடி!

author img

By

Published : Mar 29, 2021, 2:01 PM IST

லுகேமியா நோயிக்கு விலை குறைந்த மருந்தை கண்டறிய இந்தூர் ஐஐடி சாதனை படைத்துள்ளது.

indore latest news iit indore blood cancer treatment in indore iit researched for blood cancer acute lymphoblastic leukemia leukemia cancer in indore லுகேமியா ஐஐடி இந்தூர் புற்றுநோய் இரத்த புற்றுநோய் லுகேமியா இந்தூர் ஐஐடி
indore latest news iit indore blood cancer treatment in indore iit researched for blood cancer acute lymphoblastic leukemia leukemia cancer in indore லுகேமியா ஐஐடி இந்தூர் புற்றுநோய் இரத்த புற்றுநோய் லுகேமியா இந்தூர் ஐஐடி

இந்தூர் (மத்திய பிரதேசம்): லுகேமியா என்பது ஒருவகை இரத்த புற்றுநோய் ஆகும். இது பொதுவாக எலும்பு மஜ்ஜையில் தொடங்கி அதிக எண்ணிக்கையிலான அசாதாரண இரத்த அணுக்களை உருவாக்குகிறது. இந்த இரத்த அணுக்கள் லுகேமியா செல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்தூரில் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) குழுவினர் கடுமையான லிம்போபிளாஸ்டிக் லுகேமியா (ALL) சிகிச்சைக்கு புரத பொறியியல் அணுகுமுறையைப் பயன்படுத்தி புதிய செலவு குறைந்த மருந்து அஸ்பாரகினேஸை (MASPAR) உருவாக்கியுள்ளனர்.

குறைவான அல்லது குறைவான பக்க விளைவுகள் அற்ற இம்மருந்து 12 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளது. லுகேமியா ஒரு வகை இரத்த புற்றுநோயாகும். இந்த வகை நோயினால் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25,000 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதில் நான்கில் ஒரு பங்கு நோயாளிகளுக்கு மட்டுமே சரியான சிகிச்சை கிடைக்கிறது.

மேலும், தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் அஸ்பாரகினேஸின் மருந்துகள் தொடர்ச்சியான அளவுகள், கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகள், ஹைபர்சென்சிட்டிவிட்டி மற்றும் பல்வேறு உறுப்புகள் பாதிப்பு உள்பட கணையத்தில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துதல் என பல்வேறு பிரச்சினைகளை கொடுத்துவருகின்றன.

indore latest news iit indore blood cancer treatment in indore iit researched for blood cancer acute lymphoblastic leukemia leukemia cancer in indore லுகேமியா ஐஐடி இந்தூர் புற்றுநோய் இரத்த புற்றுநோய் லுகேமியா இந்தூர் ஐஐடி
மருந்து

இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை ஐ.ஐ.டி-இந்தூர் புற்றுநோய் சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான மேம்பட்ட மையங்களுடன் இணைந்து, டாடா நினைவு மையங்கள் (ACTREC, TMC), மும்பை மற்றும் மும்பையைச் சேர்ந்த உயிர் மருந்தக நிறுவனங்கள் விரைவில் மருந்துகளின் முதலாம் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கவுள்ளன.

முதல் கட்டத்தில், 25 முதல் 30 பேர் வரை சோதனை செய்யப்படுவார்கள். இந்நிலையில், “ஐ.ஐ.டி போன்ற நிறுவனங்களின் ஆராய்ச்சி எப்போதும் முதன்மைப் பணியாக இருந்து வருகிறது” என்று இயக்குநர் (ஆபிஸியேட்டிங்) பேராசிரியர் நீலேஷ் ஜெயின் கூறினார். மேலும் அவர், "சுகாதாரத் துறையில் இத்தகைய முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொடுக்கும், இது பக்க விளைவுகள் அற்ற சிகிச்சையையும் கொடுக்கிறது. குறிப்பாக, சிகிச்சை செலவுகளை குறைக்கிறது. அடுத்தக் கட்ட சோதனை முடிவுகள் முக்கியமானவை” என்றார்.

இதையும் படிங்க: உலகப் புற்றுநோய் நாள் அனுசரிப்பு

இந்தூர் (மத்திய பிரதேசம்): லுகேமியா என்பது ஒருவகை இரத்த புற்றுநோய் ஆகும். இது பொதுவாக எலும்பு மஜ்ஜையில் தொடங்கி அதிக எண்ணிக்கையிலான அசாதாரண இரத்த அணுக்களை உருவாக்குகிறது. இந்த இரத்த அணுக்கள் லுகேமியா செல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்தூரில் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) குழுவினர் கடுமையான லிம்போபிளாஸ்டிக் லுகேமியா (ALL) சிகிச்சைக்கு புரத பொறியியல் அணுகுமுறையைப் பயன்படுத்தி புதிய செலவு குறைந்த மருந்து அஸ்பாரகினேஸை (MASPAR) உருவாக்கியுள்ளனர்.

குறைவான அல்லது குறைவான பக்க விளைவுகள் அற்ற இம்மருந்து 12 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளது. லுகேமியா ஒரு வகை இரத்த புற்றுநோயாகும். இந்த வகை நோயினால் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25,000 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதில் நான்கில் ஒரு பங்கு நோயாளிகளுக்கு மட்டுமே சரியான சிகிச்சை கிடைக்கிறது.

மேலும், தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் அஸ்பாரகினேஸின் மருந்துகள் தொடர்ச்சியான அளவுகள், கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகள், ஹைபர்சென்சிட்டிவிட்டி மற்றும் பல்வேறு உறுப்புகள் பாதிப்பு உள்பட கணையத்தில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துதல் என பல்வேறு பிரச்சினைகளை கொடுத்துவருகின்றன.

indore latest news iit indore blood cancer treatment in indore iit researched for blood cancer acute lymphoblastic leukemia leukemia cancer in indore லுகேமியா ஐஐடி இந்தூர் புற்றுநோய் இரத்த புற்றுநோய் லுகேமியா இந்தூர் ஐஐடி
மருந்து

இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை ஐ.ஐ.டி-இந்தூர் புற்றுநோய் சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான மேம்பட்ட மையங்களுடன் இணைந்து, டாடா நினைவு மையங்கள் (ACTREC, TMC), மும்பை மற்றும் மும்பையைச் சேர்ந்த உயிர் மருந்தக நிறுவனங்கள் விரைவில் மருந்துகளின் முதலாம் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கவுள்ளன.

முதல் கட்டத்தில், 25 முதல் 30 பேர் வரை சோதனை செய்யப்படுவார்கள். இந்நிலையில், “ஐ.ஐ.டி போன்ற நிறுவனங்களின் ஆராய்ச்சி எப்போதும் முதன்மைப் பணியாக இருந்து வருகிறது” என்று இயக்குநர் (ஆபிஸியேட்டிங்) பேராசிரியர் நீலேஷ் ஜெயின் கூறினார். மேலும் அவர், "சுகாதாரத் துறையில் இத்தகைய முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொடுக்கும், இது பக்க விளைவுகள் அற்ற சிகிச்சையையும் கொடுக்கிறது. குறிப்பாக, சிகிச்சை செலவுகளை குறைக்கிறது. அடுத்தக் கட்ட சோதனை முடிவுகள் முக்கியமானவை” என்றார்.

இதையும் படிங்க: உலகப் புற்றுநோய் நாள் அனுசரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.