ETV Bharat / bharat

மூக்கின் ஒரு பகுதியை இழந்த குழந்தை.. மருத்துவர்களின் கவனக்குறைவால் நிகழ்ந்ததா?

author img

By

Published : Jul 8, 2023, 9:41 PM IST

முறையற்ற சிகிச்சை மற்றும் மருத்துவர்களின் கவனக் குறைவு காரணமாக பச்சிளம் குழந்தையின் மூக்கு பகுதி தனியாக வந்ததாக கூறப்படும் சம்பவத்தில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Child
Child

ஐதராபாத் : மருத்துவர்களின் கவனக்குறைவு மற்றும் முறையற்ற சிகிச்சை காரணமாக திசுக்கள் இறப்பு ஏற்பட்டு பச்சிளம் குழந்தையின் மூக்கின் பாகம் தனியாக வந்ததாக கூறி பெற்றோர் அளித்த புகாரில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து ஐதராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் கலபட்டார் பகுதியைச் சேர்ந்தவர்கள் இம்ரான் - ஹர்சனுஷா கான் தம்பதி. திருமணமான 13 ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு குழந்தை பிறந்து உள்ளது. கடந்த ஜூன் 8ஆம் தேதி ஹைபர்கூடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹர்சனுஷாவுக்கு பிரசவம் பார்க்கப்பட்ட நிலையில் குறைமாதத்தில் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மூச்சுத் திணறல் உள்ள பிரச்சினைகள் காரணமாக பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பச்சிளம் சிசுவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து உள்ளனர். ஏறத்தாழ 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு தங்களது குழந்தையை பார்த்த பெற்றோருக்கு அதிர்ச்சியாக சிசுவின் மூக்கு பகுதி கருப்பு நிறத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவர்களிடம் பெற்றோர் கேட்ட போது, தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு இருந்ததால் நிறமாற்றம் காரணமாக மூக்கு பகுதி கருப்பாக மாறியிருக்கலாம் என்றும் 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தைலத்தை எழுதிக் கொடுத்து கருப்பு நிறம் உள்ள இடத்தில் தடவுமாறு மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு பின் குழந்தையின் மூக்கில் கருப்பு நிறத்தில் இருந்த பகுதி தனியாக வந்ததாக சொல்லப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர், மருத்துவர்களிடம் முறையிட்ட நிலையில் அஜாக்கிரதையாக பதில் கூறியதாக சொல்லப்படுகிறது. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு வகை ஒளியுடன் கூடிய சிகிச்சையான போட்டோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகப்படியான போட்டோதெரபி சிகிச்சை காரனமாக அரிதாக நிகழும் மூக்கு நசிவு என்று கூறப்படும் திசுக்கள் உயிரிழப்பு சிசுவின் மூக்கு பகுதியில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக குழந்தையின் மூக்கு பகுதியில் கருப்பு நிறம் உருவாகி, தனியாக வந்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் குழந்தையின் மூக்கு பகுதியில் தொற்று இருந்ததன் காரணமாக இப்படி நேர்ந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக போலீசார் கூறி உள்ளனர்.

குழந்தைக்கு ஒரு வயதானதும் மூக்குப் பகுதியை மீண்டும் பொருத்த முயற்சிப்பதாகவும், அல்லது பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என்றால் 10 வருடங்களாகும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக சொல்லப்படுகிறது. குழந்தையின் சிகிச்சைக்காக நாள்தோறும் 35 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டதாகவும், ஏறத்தாழ 5 லட்ச ரூபாய் கடன் வாங்கி மருத்துவமனைக்கு இறுதியாக கட்டணம் செலுத்தியதாகவும் தம்பதி தெரிவித்து உள்ளது.

தங்கள் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் தொடர்ந்து மூக்கு ஒழுகுதல் பிரச்சினை இருந்ததாகவும், மருத்துவர்கள் அதற்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் தம்பதி குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : சோர்வாகவும் இல்லை.. ஓய்வு பெறும் திட்டமும் இல்லை... - சரத் பவார் பளீச் பதில்!

ஐதராபாத் : மருத்துவர்களின் கவனக்குறைவு மற்றும் முறையற்ற சிகிச்சை காரணமாக திசுக்கள் இறப்பு ஏற்பட்டு பச்சிளம் குழந்தையின் மூக்கின் பாகம் தனியாக வந்ததாக கூறி பெற்றோர் அளித்த புகாரில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து ஐதராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் கலபட்டார் பகுதியைச் சேர்ந்தவர்கள் இம்ரான் - ஹர்சனுஷா கான் தம்பதி. திருமணமான 13 ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு குழந்தை பிறந்து உள்ளது. கடந்த ஜூன் 8ஆம் தேதி ஹைபர்கூடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹர்சனுஷாவுக்கு பிரசவம் பார்க்கப்பட்ட நிலையில் குறைமாதத்தில் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மூச்சுத் திணறல் உள்ள பிரச்சினைகள் காரணமாக பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பச்சிளம் சிசுவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து உள்ளனர். ஏறத்தாழ 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு தங்களது குழந்தையை பார்த்த பெற்றோருக்கு அதிர்ச்சியாக சிசுவின் மூக்கு பகுதி கருப்பு நிறத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவர்களிடம் பெற்றோர் கேட்ட போது, தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு இருந்ததால் நிறமாற்றம் காரணமாக மூக்கு பகுதி கருப்பாக மாறியிருக்கலாம் என்றும் 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தைலத்தை எழுதிக் கொடுத்து கருப்பு நிறம் உள்ள இடத்தில் தடவுமாறு மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு பின் குழந்தையின் மூக்கில் கருப்பு நிறத்தில் இருந்த பகுதி தனியாக வந்ததாக சொல்லப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர், மருத்துவர்களிடம் முறையிட்ட நிலையில் அஜாக்கிரதையாக பதில் கூறியதாக சொல்லப்படுகிறது. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு வகை ஒளியுடன் கூடிய சிகிச்சையான போட்டோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகப்படியான போட்டோதெரபி சிகிச்சை காரனமாக அரிதாக நிகழும் மூக்கு நசிவு என்று கூறப்படும் திசுக்கள் உயிரிழப்பு சிசுவின் மூக்கு பகுதியில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக குழந்தையின் மூக்கு பகுதியில் கருப்பு நிறம் உருவாகி, தனியாக வந்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் குழந்தையின் மூக்கு பகுதியில் தொற்று இருந்ததன் காரணமாக இப்படி நேர்ந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக போலீசார் கூறி உள்ளனர்.

குழந்தைக்கு ஒரு வயதானதும் மூக்குப் பகுதியை மீண்டும் பொருத்த முயற்சிப்பதாகவும், அல்லது பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என்றால் 10 வருடங்களாகும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக சொல்லப்படுகிறது. குழந்தையின் சிகிச்சைக்காக நாள்தோறும் 35 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டதாகவும், ஏறத்தாழ 5 லட்ச ரூபாய் கடன் வாங்கி மருத்துவமனைக்கு இறுதியாக கட்டணம் செலுத்தியதாகவும் தம்பதி தெரிவித்து உள்ளது.

தங்கள் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் தொடர்ந்து மூக்கு ஒழுகுதல் பிரச்சினை இருந்ததாகவும், மருத்துவர்கள் அதற்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் தம்பதி குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : சோர்வாகவும் இல்லை.. ஓய்வு பெறும் திட்டமும் இல்லை... - சரத் பவார் பளீச் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.