ETV Bharat / bharat

கேரளாவில் வரலாற்று வெற்றியை ருசித்த இடதுசாரிகள்!

author img

By

Published : Dec 17, 2020, 1:10 PM IST

திருவனந்தபுரம்: நாட்டில் வாக்களிக்கும் முறை சாதியை அடிப்படையாக கிடையாது என்பதற்கு, சிறந்த உதாரணமாக கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் அமைந்துள்ளது.

திருவனந்தபுரம்
திருவனந்தபுரம்

சமீபத்திய தேர்தல்களில் நாட்டில் வாக்களிக்கும் முறை பெரும்பாலும் ஒரு சாதி / மத அடிப்படையில் இருக்கும் போது, ​​கேரளாவில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் வாக்களிக்கும் முறை வரவேற்கத்தக்க வகையில் உள்ளது.

உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கு மக்கள் வாக்களித்ததாகத் தோன்றியது.

வளர்ச்சிக்கு வாக்களியுங்கள்

இவற்றுக்கு எதிராக பாஜக மேற்கொண்ட தந்திரங்களும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் எந்தவொரு சாதகமான முடிவையும் எடுக்கத் தவறிவிட்டன. இந்த வெற்றியானது, அடுத்த நான்கு அலல்து ஐந்து மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு சாதகமாக இருக்கும்.

'வளர்ச்சிக்கு வாக்களியுங்கள்' என்ற முழக்கத்தோடு முதலமைச்சர் பினராயி விஜயன் இடது முன்னணி பரப்புரையில் முக்கிய நபராக இருந்தார். கேரளாவில் எந்த அரசாங்கமும் சமீபத்திய காலங்களில் அதன் தலைவர்களுக்கு எதிராக இத்தகைய ஒருங்கிணைந்த தாக்குதலை எதிர்கொள்ளவில்லை. ​​

எதிர்க்கட்சிகள் மறைக்க முடியவில்லை

பெரும்பாலும் அரைகுறை உண்மைகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியோர் ஊடகங்களில் வெறுக்கத்தக்க பரப்புரையை மேற்கொண்டபோதும், உள்ளாட்சி அமைப்பின் மூன்று கட்ட வாக்கெடுப்புக்கு நெருக்கமான நாட்களில் அரசாங்கம் அதன் குரலை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க போராடியது. எவ்வாறாயினும், உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் தற்போதைய ஆட்சி மேற்கொண்ட சமூக நலத் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை எதிர்க்கட்சிகளால் மறைக்க முடியவில்லை என்று முடிவுகள் காட்டுகின்றன. அங்கு பொதுமக்கள் பெரும்பாலும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு நெருக்கமான விஷயங்களைப் பற்றி மட்டுமே யோசித்தனர்.

எல்டிஎஃப்(LDF) ஆறு மாநகராட்சிகளில் மூன்றில் அறுதி பெரும்பான்மையுடனும், கொச்சி மற்றும் திருச்சூர் ஆகிய இரண்டு மாநகராட்சியை சுயேட்சைகள் மற்றும் போட்டி வேட்பாளர்கள் ஆதரவோடு கைப்பற்றக்கூடும்.

14 மாவட்ட பஞ்சாயத்துகளில், ​​2015 தேர்தலின் போது 7 மட்டுமே வென்ற எல்.டி.எஃப் தற்போது 10ஐை வென்றுள்ளது. LDF வெற்றிபெற முடியாது என்று கூறப்படும் நகராட்சிகளைப் பொறுத்தவரை, அது 86 நகராட்சிகளில் 35ஐை வென்றுள்ளது.

இங்கே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது, ​​மேலும் ஒரு நகராட்சியை வென்று அவற்றின் எண்ணிக்கையை இரண்டாக்கியுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 45 நகராட்சிகளை வென்றாலும், மேலும் நான்கு நகராட்சிகளின் தலைவிதி சுயேட்சை வேட்பாளர்களின் கைகளில் உள்ளது.

152 தொகுதி பஞ்சாயத்துகளில் 112இல் LDF வெற்றி பெற்றுள்ளது. 2015 தேர்தலில் LDF 89 தொகுதி பஞ்சாயத்துகளை மட்டுமே வென்றது. UDF 40 தொகுதி பஞ்சாயத்துகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது, மீதமுள்ள முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

941 கிராம பஞ்சாயத்துகளில், LDF 514ஐை வென்றது. UDF 377 மற்றும் NDA 22ஐை வென்றுள்ளன. சுயேட்சைகள் மற்றும் பிற சிறிய கட்சிகள் 28 கிராம பஞ்சாயத்துகளைப் பெற்றுள்ளன. துல்லியம் மற்றும் செயல்திறனுடன் நிர்வாக பரவலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ள நாட்டின் மிகச் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றாக கேரளா உள்ளது.

கேரளாவில் அரசு பேரிடர்களை எதிர்கொண்டபோது ஊராட்சி மன்றங்கள், அவர்களின் அரசியல் சார்பை பொருட்படுத்தாமல், வெளிப்படையாகவே ஈடுபட்டனர். நிப்பா வைரஸ் மாநிலத்தை உலுக்கியபோது, ​​இதுபோன்ற ஒரு பரவலாக்கப்பட்ட நிர்வாக முறையின் செயல்திறனை பொதுமக்கள் கண்டனர்.

வெளிச்சம் பெற்ற கேரளா

கேரளாவில் வெள்ள பேரழிவின் போது உள்ளூர் அமைப்புகளின் தலையீடு, தற்போதைய அரசாங்கத்தின் செயல்திறனில் மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியது. உலகம் முழுவதும் கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான வழிமுறைகள் குறித்து ​​ஆராயும்போது கேரளா மீண்டும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் அதன் "மைக்ரோமேனேஜ்மென்ட்" மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

தற்போதைய அரசாங்கம் இதுபோன்ற கடினமான காலங்களில் அதன் தொலைநோக்கு செயல்பாட்டின் பலன்களைப் பெற்றுள்ளது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் நாட்டிலேயே முதல் கோவிட் தொற்று கண்டறியப்பட்ட சில வாரங்களிலேயே ரூ.20,000 கோடி நிவாரண உதவியை அறிவித்தது.

ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட வேலைஇழப்பைத் தொடர்ந்து கேரளாவில் வசிக்கும் யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதையும், மாநிலம் முழுவதும் சமூக சமையலறைகளை நிறுவுவதையும், அது உறுதி செய்தது. ஒவ்வொரு வீட்டிற்கும் அவர்களின் நிதி நிலையைப் பொருட்படுத்தாமல் வழக்கமான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

இது முதியோர் ஓய்வூதியத் தொகையை அதிகரித்ததுடன், தொழிலாளர் வர்க்க சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளுக்குப் பல சமூக நலத் திட்டங்களையும், நிவாரண நிதிகளையும் அறிமுகப்படுத்தியது.

இது சமூக அமைப்புகள், நிதி அளிப்போர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, அனைத்து நிவாரண முயற்சிகளையும் ஒருங்கிணைத்தது. இத்தகைய செயல்பாடுகள் வாக்காளர்களுக்கு தெளிவாகத் தெரிந்தபோது, ​​உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் LDF அரசாங்கம் சிறப்பாக வெற்றிபெற உதவியது.

உள்ளாட்சி அமைப்பு தேர்தல் முடிவுகளும் கேரளாவில் விசித்திரமான அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. முடிவுகள் நிர்வாக ரீதியாகவும், ஓரளவிற்கு அரசியல் ரீதியாகவும் வரவேற்கப்படும்போது, ​​ மிக தாமதமான பாஜகவின் எழுச்சியை வெளிப்படுத்துகிறது.

கேரளா ஜனநாயக அமைப்பில் பாஜகவால் ஊடுருவ முடியவில்லை என்றாலும், கேரள அரசியலில் அது அதிகரித்து வருவது இன்னும் தெளிவாகி வருகிறது. மறுபுறம், நாட்டின் பல வலுவான காங்கிரஸ் மாநிலங்களில், சமீபத்திய காலங்களில் கண்ட காங்கிரஸின் வீழ்ச்சி தெளிவாக தெரிகிறது.

மாநிலத்தின் அரசியல் மையமான திருவனந்தபுரம் மாநகராட்சியில் 3ஆவது இடத்திற்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. 100 வார்டுகளை கொண்ட மாநகராட்சியில் பாஜக 35 வார்டுகளை வென்றது.

காங்கிரஸ் 10 வார்டுகளில் மட்டுமே வென்றது. நடப்பாண்டில்(2020) தனது 2015ஆம் ஆண்டில் 43 வார்டுகளில் வென்ற LDF இந்தத் தேர்தலில் 52ஐை வென்றுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவின் ஒரே நோக்கம் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றுவது ஆகும்.

பெரிய திட்டம் தோல்வி

இதற்கான ஒரு பெரிய திட்டம் அதன் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்டது. எனினும், 2015 தேர்தல்களில் பாஜக பெற்ற அதே எண்ணிக்கையை பெற்று, இந்தத் திட்டம் தோல்வியுற்றது.

இருப்பினும், கண்ணூர் மாநகராட்சியில் முதல் முறையாக பாஜக ஒரு வார்டை வென்றதுடன், கிராம பஞ்சாயத்துகளிலும், நகராட்சிகளிலும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடிந்தது. 'காங்கிரஸ் முக்த்' (காங்கிரஸ் இல்லாமல்) ஆகி வருகிறது என்ற மற்ற இந்திய மாநிலங்களில் கட்சியின் தேசியத் தலைவர்கள் பேசுவதை பாஜகவின் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரனின் வார்த்தைகள் எதிரொலித்தன.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் கேரளாவில் LDFக்கு பாஜக முக்கிய எதிர்ப்பாக இருக்கும் என்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் சுரேந்திரன் கூறினார். கேரளாவில் காங்கிரசுக்கு ஒரு வலுவான தலைமை இல்லாதது, அதன் தலைமையில் எழும் குழு மோதல்களும் ஈகோ மோதல்களும் கேரளாவில் கட்சியின் வாய்ப்புகளை மிகவும் பாதிக்கிறது.

புத்திசாலித்தனம் இல்லை

பல ஆண்டுகளாக UDFஇன் நம்பகமான கூட்டாளியான கேரள காங்கிரஸை (எம்) வெளியேற்றுவதில் எல்.டி.எஃப் வெற்றிபெற்றதில் காங்கிரஸ் தலைமையின் அரசியல் புத்திசாலித்தனம் இல்லாதது தெளிவாகத் தெரிந்தது.

UDFஇன் வலுவான கோட்டைகளாக கருதப்பட்ட கோட்டயம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கியின் சில பகுதி உள்ளாட்சி அமைப்புகளை LDF வெல்வதற்கு கேரள காங்கிரஸ் (எம்) உதவியது. மலப்புரம், காசர்கோடு மற்றும் வயநாடு போன்ற மாவட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் வாக்கு வங்கியை பெரிதும் நம்பியுள்ளன என்பதை UDFஇன் தற்போதைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது கிட்டத்தட்ட 2015 தேர்தல்களுக்கு ஒத்தவை.

இந்தத் தேர்தலில் இன்னொரு முக்கிய அம்சம், இளம் வேட்பாளர்களை வாக்காளர்கள் பெருமளவில் ஏற்றுக்கொண்டதாகும். அனைத்து அரசியல் கட்சிகளும் இளம் வேட்பாளர்களை, சிலர் 21 வயதிற்குட்பட்டவர்கள், நிறுத்தின.

அவர்களில் பெரும்பாலோர் தங்கள் பழைய சகாக்களை வெல்ல முடிந்தது. அரசியல் கட்சிகளால் களமிறக்கப்பட்ட மேயர் வேட்பாளர்களில் வயதான பெரும்பாலோர், இளம் வேட்பாளர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.

இது இளம் இரத்தத்திற்கு ஆதரவாக ஒரு அரசியல் கருத்தை தெளிவாக உருவாக்கியதைக் குறிக்கிறது. கட்சிகள் உயர்மட்ட தலைவர்கள் அளிக்கும் அரசியல் அறிக்கைகளை வாக்காளர்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகிறார்கள் என்பதும் தெளிவாகிறது.

கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்து கொண்டிருந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் தொகுதியான புதுப்பள்ளி பஞ்சாயத்தை LDF வென்றது. LDF வேட்பாளர்கள் கேரளா காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரனின் வார்டிலும், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவின் வார்டிலும் வெற்றி பெற்றனர்.

மொத்தத்தில் கேரள வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதற்கு முன்பு ஒரு நல்ல முடிவெடுத்ததாகத் தெரிகிறது. வெறுப்பு பிரச்சாரங்கள், ஊழல் மற்றும் ஒற்றுமை பற்றிய அரசியல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், LDF தனது வளர்ச்சியின் குறிக்கோள்களை அடிமட்ட வாக்காளருக்குத் தெரிவிக்க முடிந்தது.

சமூக ஊடகங்கள் தகவல்களைப் பரப்புவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தன மற்றும் டிஜிட்டல் மீடியா தளங்கள் போன்ற வழக்கத்திற்கு மாறான ஊடக நிறுவனங்களும், உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகளை வாக்காளர்களுக்குத் தெரிவிக்க உதவுவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன.

சாத்தியமான ஆயுதங்களை தேட வேண்டும்

கேரள சிபிஎம்மில் மறுக்கமுடியாத மற்றும் மிகப்பெரிய தலைவராக பினராயி விஜயனின் முக்கியத்துவம் மீண்டும் தெளிவாகியுள்ளதுடன், LDF சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி புதிய நம்பிக்கையுடன் செல்லும்.

UDF மற்றும் NDA கட்சிகள் தற்போதைய ஆட்சி தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றிபெறுவதைத் தடுக்க அதிக சாத்தியமான ஆயுதங்களைத் தேட வேண்டும்.

சமீபத்திய தேர்தல்களில் நாட்டில் வாக்களிக்கும் முறை பெரும்பாலும் ஒரு சாதி / மத அடிப்படையில் இருக்கும் போது, ​​கேரளாவில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் வாக்களிக்கும் முறை வரவேற்கத்தக்க வகையில் உள்ளது.

உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கு மக்கள் வாக்களித்ததாகத் தோன்றியது.

வளர்ச்சிக்கு வாக்களியுங்கள்

இவற்றுக்கு எதிராக பாஜக மேற்கொண்ட தந்திரங்களும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் எந்தவொரு சாதகமான முடிவையும் எடுக்கத் தவறிவிட்டன. இந்த வெற்றியானது, அடுத்த நான்கு அலல்து ஐந்து மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு சாதகமாக இருக்கும்.

'வளர்ச்சிக்கு வாக்களியுங்கள்' என்ற முழக்கத்தோடு முதலமைச்சர் பினராயி விஜயன் இடது முன்னணி பரப்புரையில் முக்கிய நபராக இருந்தார். கேரளாவில் எந்த அரசாங்கமும் சமீபத்திய காலங்களில் அதன் தலைவர்களுக்கு எதிராக இத்தகைய ஒருங்கிணைந்த தாக்குதலை எதிர்கொள்ளவில்லை. ​​

எதிர்க்கட்சிகள் மறைக்க முடியவில்லை

பெரும்பாலும் அரைகுறை உண்மைகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியோர் ஊடகங்களில் வெறுக்கத்தக்க பரப்புரையை மேற்கொண்டபோதும், உள்ளாட்சி அமைப்பின் மூன்று கட்ட வாக்கெடுப்புக்கு நெருக்கமான நாட்களில் அரசாங்கம் அதன் குரலை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க போராடியது. எவ்வாறாயினும், உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் தற்போதைய ஆட்சி மேற்கொண்ட சமூக நலத் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை எதிர்க்கட்சிகளால் மறைக்க முடியவில்லை என்று முடிவுகள் காட்டுகின்றன. அங்கு பொதுமக்கள் பெரும்பாலும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு நெருக்கமான விஷயங்களைப் பற்றி மட்டுமே யோசித்தனர்.

எல்டிஎஃப்(LDF) ஆறு மாநகராட்சிகளில் மூன்றில் அறுதி பெரும்பான்மையுடனும், கொச்சி மற்றும் திருச்சூர் ஆகிய இரண்டு மாநகராட்சியை சுயேட்சைகள் மற்றும் போட்டி வேட்பாளர்கள் ஆதரவோடு கைப்பற்றக்கூடும்.

14 மாவட்ட பஞ்சாயத்துகளில், ​​2015 தேர்தலின் போது 7 மட்டுமே வென்ற எல்.டி.எஃப் தற்போது 10ஐை வென்றுள்ளது. LDF வெற்றிபெற முடியாது என்று கூறப்படும் நகராட்சிகளைப் பொறுத்தவரை, அது 86 நகராட்சிகளில் 35ஐை வென்றுள்ளது.

இங்கே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது, ​​மேலும் ஒரு நகராட்சியை வென்று அவற்றின் எண்ணிக்கையை இரண்டாக்கியுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 45 நகராட்சிகளை வென்றாலும், மேலும் நான்கு நகராட்சிகளின் தலைவிதி சுயேட்சை வேட்பாளர்களின் கைகளில் உள்ளது.

152 தொகுதி பஞ்சாயத்துகளில் 112இல் LDF வெற்றி பெற்றுள்ளது. 2015 தேர்தலில் LDF 89 தொகுதி பஞ்சாயத்துகளை மட்டுமே வென்றது. UDF 40 தொகுதி பஞ்சாயத்துகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது, மீதமுள்ள முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

941 கிராம பஞ்சாயத்துகளில், LDF 514ஐை வென்றது. UDF 377 மற்றும் NDA 22ஐை வென்றுள்ளன. சுயேட்சைகள் மற்றும் பிற சிறிய கட்சிகள் 28 கிராம பஞ்சாயத்துகளைப் பெற்றுள்ளன. துல்லியம் மற்றும் செயல்திறனுடன் நிர்வாக பரவலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ள நாட்டின் மிகச் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றாக கேரளா உள்ளது.

கேரளாவில் அரசு பேரிடர்களை எதிர்கொண்டபோது ஊராட்சி மன்றங்கள், அவர்களின் அரசியல் சார்பை பொருட்படுத்தாமல், வெளிப்படையாகவே ஈடுபட்டனர். நிப்பா வைரஸ் மாநிலத்தை உலுக்கியபோது, ​​இதுபோன்ற ஒரு பரவலாக்கப்பட்ட நிர்வாக முறையின் செயல்திறனை பொதுமக்கள் கண்டனர்.

வெளிச்சம் பெற்ற கேரளா

கேரளாவில் வெள்ள பேரழிவின் போது உள்ளூர் அமைப்புகளின் தலையீடு, தற்போதைய அரசாங்கத்தின் செயல்திறனில் மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியது. உலகம் முழுவதும் கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான வழிமுறைகள் குறித்து ​​ஆராயும்போது கேரளா மீண்டும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் அதன் "மைக்ரோமேனேஜ்மென்ட்" மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

தற்போதைய அரசாங்கம் இதுபோன்ற கடினமான காலங்களில் அதன் தொலைநோக்கு செயல்பாட்டின் பலன்களைப் பெற்றுள்ளது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் நாட்டிலேயே முதல் கோவிட் தொற்று கண்டறியப்பட்ட சில வாரங்களிலேயே ரூ.20,000 கோடி நிவாரண உதவியை அறிவித்தது.

ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட வேலைஇழப்பைத் தொடர்ந்து கேரளாவில் வசிக்கும் யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதையும், மாநிலம் முழுவதும் சமூக சமையலறைகளை நிறுவுவதையும், அது உறுதி செய்தது. ஒவ்வொரு வீட்டிற்கும் அவர்களின் நிதி நிலையைப் பொருட்படுத்தாமல் வழக்கமான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

இது முதியோர் ஓய்வூதியத் தொகையை அதிகரித்ததுடன், தொழிலாளர் வர்க்க சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளுக்குப் பல சமூக நலத் திட்டங்களையும், நிவாரண நிதிகளையும் அறிமுகப்படுத்தியது.

இது சமூக அமைப்புகள், நிதி அளிப்போர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, அனைத்து நிவாரண முயற்சிகளையும் ஒருங்கிணைத்தது. இத்தகைய செயல்பாடுகள் வாக்காளர்களுக்கு தெளிவாகத் தெரிந்தபோது, ​​உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் LDF அரசாங்கம் சிறப்பாக வெற்றிபெற உதவியது.

உள்ளாட்சி அமைப்பு தேர்தல் முடிவுகளும் கேரளாவில் விசித்திரமான அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. முடிவுகள் நிர்வாக ரீதியாகவும், ஓரளவிற்கு அரசியல் ரீதியாகவும் வரவேற்கப்படும்போது, ​​ மிக தாமதமான பாஜகவின் எழுச்சியை வெளிப்படுத்துகிறது.

கேரளா ஜனநாயக அமைப்பில் பாஜகவால் ஊடுருவ முடியவில்லை என்றாலும், கேரள அரசியலில் அது அதிகரித்து வருவது இன்னும் தெளிவாகி வருகிறது. மறுபுறம், நாட்டின் பல வலுவான காங்கிரஸ் மாநிலங்களில், சமீபத்திய காலங்களில் கண்ட காங்கிரஸின் வீழ்ச்சி தெளிவாக தெரிகிறது.

மாநிலத்தின் அரசியல் மையமான திருவனந்தபுரம் மாநகராட்சியில் 3ஆவது இடத்திற்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. 100 வார்டுகளை கொண்ட மாநகராட்சியில் பாஜக 35 வார்டுகளை வென்றது.

காங்கிரஸ் 10 வார்டுகளில் மட்டுமே வென்றது. நடப்பாண்டில்(2020) தனது 2015ஆம் ஆண்டில் 43 வார்டுகளில் வென்ற LDF இந்தத் தேர்தலில் 52ஐை வென்றுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவின் ஒரே நோக்கம் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றுவது ஆகும்.

பெரிய திட்டம் தோல்வி

இதற்கான ஒரு பெரிய திட்டம் அதன் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்டது. எனினும், 2015 தேர்தல்களில் பாஜக பெற்ற அதே எண்ணிக்கையை பெற்று, இந்தத் திட்டம் தோல்வியுற்றது.

இருப்பினும், கண்ணூர் மாநகராட்சியில் முதல் முறையாக பாஜக ஒரு வார்டை வென்றதுடன், கிராம பஞ்சாயத்துகளிலும், நகராட்சிகளிலும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடிந்தது. 'காங்கிரஸ் முக்த்' (காங்கிரஸ் இல்லாமல்) ஆகி வருகிறது என்ற மற்ற இந்திய மாநிலங்களில் கட்சியின் தேசியத் தலைவர்கள் பேசுவதை பாஜகவின் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரனின் வார்த்தைகள் எதிரொலித்தன.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் கேரளாவில் LDFக்கு பாஜக முக்கிய எதிர்ப்பாக இருக்கும் என்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் சுரேந்திரன் கூறினார். கேரளாவில் காங்கிரசுக்கு ஒரு வலுவான தலைமை இல்லாதது, அதன் தலைமையில் எழும் குழு மோதல்களும் ஈகோ மோதல்களும் கேரளாவில் கட்சியின் வாய்ப்புகளை மிகவும் பாதிக்கிறது.

புத்திசாலித்தனம் இல்லை

பல ஆண்டுகளாக UDFஇன் நம்பகமான கூட்டாளியான கேரள காங்கிரஸை (எம்) வெளியேற்றுவதில் எல்.டி.எஃப் வெற்றிபெற்றதில் காங்கிரஸ் தலைமையின் அரசியல் புத்திசாலித்தனம் இல்லாதது தெளிவாகத் தெரிந்தது.

UDFஇன் வலுவான கோட்டைகளாக கருதப்பட்ட கோட்டயம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கியின் சில பகுதி உள்ளாட்சி அமைப்புகளை LDF வெல்வதற்கு கேரள காங்கிரஸ் (எம்) உதவியது. மலப்புரம், காசர்கோடு மற்றும் வயநாடு போன்ற மாவட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் வாக்கு வங்கியை பெரிதும் நம்பியுள்ளன என்பதை UDFஇன் தற்போதைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது கிட்டத்தட்ட 2015 தேர்தல்களுக்கு ஒத்தவை.

இந்தத் தேர்தலில் இன்னொரு முக்கிய அம்சம், இளம் வேட்பாளர்களை வாக்காளர்கள் பெருமளவில் ஏற்றுக்கொண்டதாகும். அனைத்து அரசியல் கட்சிகளும் இளம் வேட்பாளர்களை, சிலர் 21 வயதிற்குட்பட்டவர்கள், நிறுத்தின.

அவர்களில் பெரும்பாலோர் தங்கள் பழைய சகாக்களை வெல்ல முடிந்தது. அரசியல் கட்சிகளால் களமிறக்கப்பட்ட மேயர் வேட்பாளர்களில் வயதான பெரும்பாலோர், இளம் வேட்பாளர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.

இது இளம் இரத்தத்திற்கு ஆதரவாக ஒரு அரசியல் கருத்தை தெளிவாக உருவாக்கியதைக் குறிக்கிறது. கட்சிகள் உயர்மட்ட தலைவர்கள் அளிக்கும் அரசியல் அறிக்கைகளை வாக்காளர்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகிறார்கள் என்பதும் தெளிவாகிறது.

கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்து கொண்டிருந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் தொகுதியான புதுப்பள்ளி பஞ்சாயத்தை LDF வென்றது. LDF வேட்பாளர்கள் கேரளா காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரனின் வார்டிலும், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவின் வார்டிலும் வெற்றி பெற்றனர்.

மொத்தத்தில் கேரள வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதற்கு முன்பு ஒரு நல்ல முடிவெடுத்ததாகத் தெரிகிறது. வெறுப்பு பிரச்சாரங்கள், ஊழல் மற்றும் ஒற்றுமை பற்றிய அரசியல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், LDF தனது வளர்ச்சியின் குறிக்கோள்களை அடிமட்ட வாக்காளருக்குத் தெரிவிக்க முடிந்தது.

சமூக ஊடகங்கள் தகவல்களைப் பரப்புவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தன மற்றும் டிஜிட்டல் மீடியா தளங்கள் போன்ற வழக்கத்திற்கு மாறான ஊடக நிறுவனங்களும், உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகளை வாக்காளர்களுக்குத் தெரிவிக்க உதவுவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன.

சாத்தியமான ஆயுதங்களை தேட வேண்டும்

கேரள சிபிஎம்மில் மறுக்கமுடியாத மற்றும் மிகப்பெரிய தலைவராக பினராயி விஜயனின் முக்கியத்துவம் மீண்டும் தெளிவாகியுள்ளதுடன், LDF சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி புதிய நம்பிக்கையுடன் செல்லும்.

UDF மற்றும் NDA கட்சிகள் தற்போதைய ஆட்சி தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றிபெறுவதைத் தடுக்க அதிக சாத்தியமான ஆயுதங்களைத் தேட வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.