ETV Bharat / bharat

கனமழை: டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட்

author img

By

Published : Sep 1, 2021, 3:45 PM IST

டெல்லியில் தொடர் கனமழை காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று முதல் செப். 4ஆம் தேதிவரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Heavy rainfall
Heavy rainfall

டெல்லியில், நேற்று(ஆக.31) அதிகாலை முதலே கனமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் முக்கிய நகர் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கனமழை

அத்துடன் அடுத்த நான்கு நாள்களுக்கு, டெல்லியின் லோதி சாலை, இந்திரா காந்தி, குருகிராம், மானேசர், ஃபரிதாபாத், நொய்டா, இந்திராபுரம், லோனி தேஹத், ஹிண்டன், காஜியாபாத் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம், டெல்லிக்கு இன்று முதல் செப். 4ஆம் தேதிவரை ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. தற்போது, கர்னல் சாலை, சஞ்சய் என்கிளேவ், நஜாஃப்கர் மற்றும் ஜஹாங்கிர்புரி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், பல்வேறு சாலைகள் திருப்பி விடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் மேற்கு, தென் மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

டெல்லியில், நேற்று(ஆக.31) அதிகாலை முதலே கனமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் முக்கிய நகர் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கனமழை

அத்துடன் அடுத்த நான்கு நாள்களுக்கு, டெல்லியின் லோதி சாலை, இந்திரா காந்தி, குருகிராம், மானேசர், ஃபரிதாபாத், நொய்டா, இந்திராபுரம், லோனி தேஹத், ஹிண்டன், காஜியாபாத் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம், டெல்லிக்கு இன்று முதல் செப். 4ஆம் தேதிவரை ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. தற்போது, கர்னல் சாலை, சஞ்சய் என்கிளேவ், நஜாஃப்கர் மற்றும் ஜஹாங்கிர்புரி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், பல்வேறு சாலைகள் திருப்பி விடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் மேற்கு, தென் மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.