ETV Bharat / bharat

Heavy Rain: புதுச்சேரியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பள்ளிகளில் தங்க வைப்பு

author img

By

Published : Nov 18, 2021, 4:32 PM IST

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரமாக பெய்து வரும் கனமழையின் விளைவாக பாகூர் மற்றும் ஊசுடு ஏரிகள் முழு கொள்ளளவிற்கு நிரம்பியுள்ளன. மேலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Heavy Rain:புதுச்சேரியில் கனமழை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பள்ளிகளில் தங்க வைப்பு
Heavy Rain

புதுச்சேரி: சமீபத்திய நிலவரப்படி 138 மி.மீ மழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதன் விளைவாக பாகூர் மற்றும் ஊசுடு ஏரிகள் முழு கொள்ளளவிற்கு நிரம்பியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் நீர் தேங்குதல், மின் கம்பம் சேதம் தொடர்பான 15 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் இதுவரை பெய்த கனமழையால் 62 குடிசைகள், 27 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் இதைத் தவிர வேறு உயிர் சேதம் ஏற்படவில்லை எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.

கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததையடுத்து மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கனமழை

இதையும் படிங்க: 2 நாள்களுக்கு உணவுப்பொருள்களை இருப்பு வைத்துக்கொள்க - சென்னை மாநகராட்சியின் அன்பான வேண்டுகோள்

புதுச்சேரி: சமீபத்திய நிலவரப்படி 138 மி.மீ மழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதன் விளைவாக பாகூர் மற்றும் ஊசுடு ஏரிகள் முழு கொள்ளளவிற்கு நிரம்பியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் நீர் தேங்குதல், மின் கம்பம் சேதம் தொடர்பான 15 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் இதுவரை பெய்த கனமழையால் 62 குடிசைகள், 27 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் இதைத் தவிர வேறு உயிர் சேதம் ஏற்படவில்லை எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.

கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததையடுத்து மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கனமழை

இதையும் படிங்க: 2 நாள்களுக்கு உணவுப்பொருள்களை இருப்பு வைத்துக்கொள்க - சென்னை மாநகராட்சியின் அன்பான வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.