ETV Bharat / bharat

ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - ஹர்ஷ் வர்தன்

author img

By

Published : Apr 15, 2021, 11:33 AM IST

டெல்லி: ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கிவைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

Harsh Vardhan
ஹர்ஷ வர்தன்

கரோனா பரவல் அதிகரித்துவருவதால், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகளைப் போன்று ரெம்டெசிவிர் மருந்தையும் பயன்படுத்தலாம் என்று சமீபத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், ரெம்டெசிவிர் மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிடம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம், ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்குக் கள்ளச்சந்தையில் விற்பனை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "கரோனா பாதிப்பு குறைந்திருந்தபோது, ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியின் வேகம் குறைக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது திடீரென கரோனா எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால், ரெம்டெசிவிர் மருந்துக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது, மீண்டும் உற்பத்தியை அதிகரிக்க மருந்து உற்பத்தியாளர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்.

அதே சமயம், ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கிவைத்து, சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதாகப் புகார் கிடைக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்த மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா விதிமுறைகளான முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல் அவசியமாகும். அவற்றைப் பின்பற்றத் தவறும்பட்சத்தில், கரோனா பாதிப்பு ஏற்படக்கூடும்" எனத் தெரிவித்தார்.

மேலும், ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்துவது குறித்து பதிலளித்த நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், "ரெம்டெசிவிர் மருந்து உபயோகிக்க வேண்டிய மருத்துவ நெறிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இதனை வீட்டில் பயன்படுத்தலாம் என்ற கேள்வியே கிடையாது. அது நெறிமுறையற்ற செயல். மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியில் இருக்கும் நோயாளிக்கும் மட்டுமே, ரெம்டெசிவிர் மருந்து தேவை" என்றார்.

கரோனாவின் இரண்டாம் அலை, நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து தேவையை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மற்ற நாடுகளுக்கான ரெம்டெசிவிர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா அறிகுறிகளை மறைத்தாரா பினராயி விஜயன் - கோவிட் பாதிப்பில் குழப்பம்

கரோனா பரவல் அதிகரித்துவருவதால், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகளைப் போன்று ரெம்டெசிவிர் மருந்தையும் பயன்படுத்தலாம் என்று சமீபத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், ரெம்டெசிவிர் மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிடம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம், ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்குக் கள்ளச்சந்தையில் விற்பனை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "கரோனா பாதிப்பு குறைந்திருந்தபோது, ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியின் வேகம் குறைக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது திடீரென கரோனா எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால், ரெம்டெசிவிர் மருந்துக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது, மீண்டும் உற்பத்தியை அதிகரிக்க மருந்து உற்பத்தியாளர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்.

அதே சமயம், ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கிவைத்து, சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதாகப் புகார் கிடைக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்த மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா விதிமுறைகளான முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல் அவசியமாகும். அவற்றைப் பின்பற்றத் தவறும்பட்சத்தில், கரோனா பாதிப்பு ஏற்படக்கூடும்" எனத் தெரிவித்தார்.

மேலும், ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்துவது குறித்து பதிலளித்த நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், "ரெம்டெசிவிர் மருந்து உபயோகிக்க வேண்டிய மருத்துவ நெறிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இதனை வீட்டில் பயன்படுத்தலாம் என்ற கேள்வியே கிடையாது. அது நெறிமுறையற்ற செயல். மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியில் இருக்கும் நோயாளிக்கும் மட்டுமே, ரெம்டெசிவிர் மருந்து தேவை" என்றார்.

கரோனாவின் இரண்டாம் அலை, நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து தேவையை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மற்ற நாடுகளுக்கான ரெம்டெசிவிர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா அறிகுறிகளை மறைத்தாரா பினராயி விஜயன் - கோவிட் பாதிப்பில் குழப்பம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.