ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

author img

By

Published : Dec 13, 2021, 4:07 PM IST

பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

உடனடியாக பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், மோதலில் இரு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதை ஜம்மு காஷ்மீர் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. நேற்று காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Miss Universe - 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு கிடைத்த பட்டம்

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

உடனடியாக பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், மோதலில் இரு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதை ஜம்மு காஷ்மீர் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. நேற்று காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Miss Universe - 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு கிடைத்த பட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.