ETV Bharat / bharat

’தடையின்றி மின்சாரம் கிடைத்திட ரூ.58 கோடி செலவிடப்பட்டுள்ளது’ - தமிழிசை செளந்தரராஜன்

author img

By

Published : Aug 26, 2021, 12:36 PM IST

புதுச்சேரி: மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகுக்கும் வகையில் அரசு சார்பாக 58 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழிசை செளவுந்திரராஜன்
தமிழிசை செளவுந்திரராஜன்

புதுச்சேரி மாநில 15ஆவது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஆக.26) காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு காவல் துறை சார்பாக அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

தொடர்ந்து, அவரை சபாநாயகர் செல்வம், சட்டப்பேரவை செயலர் முனுசாமி ஆகியோர் வரவேற்று சபைக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை தனது உரையைத் தொடங்கினார்.

திருக்குறளுடன் உரை தொடக்கம்

அப்போது பேசிய அவர், " மருத்துவர்கள், நோயாளிகளின் நிலை, நோயின் அளவு, மருந்து கொடுக்கும் காலம் ஆகியவற்றை அறிந்து மருத்துவம் செய்ய வேண்டும் என்ற திருக்குறளுக்கு ஏற்ப, கரோனா பரவியபோது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பொருட்டு நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர் ஆகிய சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.

Tamilisai speech
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர்

மின்சாரத்துக்காக 58 கோடி ரூபாய்

கரோனா தொற்று காலத்தில் பொது மக்கள் சுகாதாரத்துடன் வாழ வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், சித்த, ஆயுர்வேத மருத்துவ முகாம்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டன. மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைக்கும் வகையில் அரசு சார்பில் 58 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இலவச பாடத்திட்டங்கள், நோட்டுகள் வழங்கல் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 439 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 50 ஆயிரத்து 838 மாணவர்களுக்கு உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 16 ஆயிரத்து 192 மாணவர்களும், பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 17 ஆயிரத்து 643 மாணவர்களும் பலனடைந்துள்ளனர்.

ஊக்கத் தொகை அதிகரிப்பு

கடந்தாண்டு நடைபெற்ற தேசியத் திறனாய்வு தேர்வில், மாநில அளவில் வெற்றி பெற்ற 20 மாணவர்களுக்கு ஒரு முறை ஊக்கத் தொகையாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

மத்திய அரசு நடத்திய தேசியத் திறனாய்வு இரண்டாம் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக 10,000 ரூபாய் சுதந்திர தினவிழாவில் வழங்கப்பட்டது.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான மாணவர்கள் நிதி உதவி பெற்று உயர் கல்வியைத் தொடரும் விதமாக பெருந்தலைவர் காமராஜர் நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவியாக 18 கோடியே 77 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு 438 மருத்துவக் கல்லூரி மாணவர்களும், ஆயிரத்து 384 பொறியியல் கல்லூரி மாணவர்களும், 567 செவிலியர் பள்ளி மாணவர்களும் பயனடைந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சுங்கச்சாவடி நொறுக்கப்பட்ட வழக்கு: வேல்முருகனுக்குப் பிடியாணை

புதுச்சேரி மாநில 15ஆவது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஆக.26) காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு காவல் துறை சார்பாக அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

தொடர்ந்து, அவரை சபாநாயகர் செல்வம், சட்டப்பேரவை செயலர் முனுசாமி ஆகியோர் வரவேற்று சபைக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை தனது உரையைத் தொடங்கினார்.

திருக்குறளுடன் உரை தொடக்கம்

அப்போது பேசிய அவர், " மருத்துவர்கள், நோயாளிகளின் நிலை, நோயின் அளவு, மருந்து கொடுக்கும் காலம் ஆகியவற்றை அறிந்து மருத்துவம் செய்ய வேண்டும் என்ற திருக்குறளுக்கு ஏற்ப, கரோனா பரவியபோது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பொருட்டு நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர் ஆகிய சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.

Tamilisai speech
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர்

மின்சாரத்துக்காக 58 கோடி ரூபாய்

கரோனா தொற்று காலத்தில் பொது மக்கள் சுகாதாரத்துடன் வாழ வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், சித்த, ஆயுர்வேத மருத்துவ முகாம்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டன. மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைக்கும் வகையில் அரசு சார்பில் 58 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இலவச பாடத்திட்டங்கள், நோட்டுகள் வழங்கல் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 439 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 50 ஆயிரத்து 838 மாணவர்களுக்கு உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 16 ஆயிரத்து 192 மாணவர்களும், பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 17 ஆயிரத்து 643 மாணவர்களும் பலனடைந்துள்ளனர்.

ஊக்கத் தொகை அதிகரிப்பு

கடந்தாண்டு நடைபெற்ற தேசியத் திறனாய்வு தேர்வில், மாநில அளவில் வெற்றி பெற்ற 20 மாணவர்களுக்கு ஒரு முறை ஊக்கத் தொகையாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

மத்திய அரசு நடத்திய தேசியத் திறனாய்வு இரண்டாம் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக 10,000 ரூபாய் சுதந்திர தினவிழாவில் வழங்கப்பட்டது.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான மாணவர்கள் நிதி உதவி பெற்று உயர் கல்வியைத் தொடரும் விதமாக பெருந்தலைவர் காமராஜர் நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவியாக 18 கோடியே 77 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு 438 மருத்துவக் கல்லூரி மாணவர்களும், ஆயிரத்து 384 பொறியியல் கல்லூரி மாணவர்களும், 567 செவிலியர் பள்ளி மாணவர்களும் பயனடைந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சுங்கச்சாவடி நொறுக்கப்பட்ட வழக்கு: வேல்முருகனுக்குப் பிடியாணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.