ETV Bharat / bharat

கூட்டுப் பாலியல் வன்கொடுமை - பாதிக்கப்பட்ட பெண்ணின் காலில் இருசக்கர வாகனத்தை ஏற்றிய கொடூரம் - இருவர் கைது!

author img

By

Published : Jul 13, 2022, 8:56 PM IST

மதுரா அருகே பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் காலில் இருசக்கர வாகனத்தை ஏற்றி காயப்படுத்தியுள்ளனர்.

gang
gang

மதுரா: உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே காரோட் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான பெண்மணி ஒருவர், மே 24ஆம் தேதி வங்கியிலிருந்து பணம் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மூன்று பேர், அவரை கடத்திச் சென்றுள்ளனர்.

அந்த பெண்ணிற்கு போதைப்பொருளை கொடுத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு அந்த பெண் தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக, காலில் இருசக்கர வாகனத்தை ஏற்றி காயப்படுத்தி, அவரை புதருக்குள் தூக்கி வீசியுள்ளனர். சுயநினைவுக்கு வந்த பெண் கோசிகலா பகுதியில் உள்ள சுகாதார நிலையத்திற்கு சென்றார். பிறகு மேல் சிகிச்சைக்காக ஹரியானாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவரது ஒரு காலை மருத்துவர்கள் துண்டித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சில மணி நேரத்தில் மகேஷ், மகேந்திரா ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அந்த பெண்மணிக்கு தெரிந்தவர்கள்தான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:1ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - பள்ளி பியூன் போக்சோவில் கைது

மதுரா: உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே காரோட் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான பெண்மணி ஒருவர், மே 24ஆம் தேதி வங்கியிலிருந்து பணம் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மூன்று பேர், அவரை கடத்திச் சென்றுள்ளனர்.

அந்த பெண்ணிற்கு போதைப்பொருளை கொடுத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு அந்த பெண் தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக, காலில் இருசக்கர வாகனத்தை ஏற்றி காயப்படுத்தி, அவரை புதருக்குள் தூக்கி வீசியுள்ளனர். சுயநினைவுக்கு வந்த பெண் கோசிகலா பகுதியில் உள்ள சுகாதார நிலையத்திற்கு சென்றார். பிறகு மேல் சிகிச்சைக்காக ஹரியானாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவரது ஒரு காலை மருத்துவர்கள் துண்டித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சில மணி நேரத்தில் மகேஷ், மகேந்திரா ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அந்த பெண்மணிக்கு தெரிந்தவர்கள்தான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:1ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - பள்ளி பியூன் போக்சோவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.