ETV Bharat / bharat

"இந்தியாவை சர்வதேச அளவில் காட்சிப்படுத்தும் வாய்ப்பு ஜி20 உச்சி மாநாடு" - IGIDR முன்னாள் துணைவேந்தர் மகேந்திர தேவ் கருத்து!

G20 summit: ஜி20 நாடுகளின் 18வது மாநாட்டில் கலந்து கொண்டு உள்ள சர்வதேச நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வதேச பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர். மேலும் இந்தியாவை சர்வதேச அளவில் காட்சிப்படுத்தும் வாய்ப்பாக இந்த ஜி20 உச்சி மாநாடு அமையும் என இந்திரா காந்தி ஆராய்ச்சி மேம்பாட்டு கழக முன்னாள் துணை வேந்தர் மகேந்திர தேவ் விவரிக்கிறார்...

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 4:30 PM IST

G20 summit
G20 summit

ஹைதராபாத்: ஜி20 அமைப்பில் இடம் பெற்று உள்ள நாடுகள், சர்வதேச அளவில் 85 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், 75 சதவீத அளவிலான சர்வதேச வர்த்தகத்தையும், மொத்த மக்கள்தொகையில், மூன்றில் இரண்டு பங்கு அளவிலான மக்கள்தொகையயும் தன்னகத்தே கொண்டு உள்ளன.

ஜி 20 நாடுகளின் 18வது உச்சி மாநாடு, தலைநகர் டெல்லியில் இன்று (செப். 9) துவங்கி நாளை (செப். 10) வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உள்ள சர்வதேச நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வதேச பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

சர்வதேச அளவில் இந்தியாவை காட்சிப்படுத்த சிறந்த வாய்ப்பு : தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவை, சர்வதேச அளவில் காட்சிப்படுத்தும் நல்ல வாய்ப்பாக அமைந்து உள்ளதாக, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வரும் IGIDR அமைப்பின் முன்னாள் துணைவேந்தரும், இந்திய அரசின் CACP அமைப்பின் முன்னாள் தலைவருமான எஸ். மகேந்திர தேவ் தெரிவித்து உள்ளார்.

ரஷ்ய - உக்ரைன் நாடுகளுக்கிடியேயான போர் உள்ளிட்ட சர்வதேச காரணிகளின் அடிப்படையில் உலகின் முக்கிய நாடுகளிடையே பிளவுகள் ஏற்பட்டு உள்ள நிலையில், இந்த உச்சி மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், இந்த மாநாட்டில் இருந்து விலகி இருப்பது, இந்த பிளவை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. இத்தகைய புவிசார் பிரச்சினைகளுக்கு இடையேயும், இந்த ஜி20 மாநாடு, இந்தியா தனது சாதனைகளை வெளிப்படுத்தி, உலகின் தெற்கு குரலாக ஒலிப்பதற்கான வாய்ப்பாக, இது அமைந்து உள்ளது.

பல்துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு என்ன : இந்த ஜி 20 உச்சி மாநாட்டிற்காக, நாடு முழுவதிலும் உள்ள 29 மாநிலங்களில் கடந்த 8 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களாக, பசுமை மேம்பாடு, பருவநிலை, நிதி, தொழில்நுட்ப மாறுபாடுகள், 21ஆம் நூற்றாண்டில் டிஜிட்டல் பொது கட்டமைப்பு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி உள்ளிட்டவைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. ஜி 20 நாடுகளில், ஆப்பிரிக்க யூனியனை சேர்ப்பதும், முக்கிய அம்சமாக உள்ளது.

பசுமை வளர்ச்சியில் பேரிடர் அபாயங்களைக் குறைத்தல், பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மாற்று எரிபொருள்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகள் மற்றும் போதாதுமான காலநிலை நிதி திரட்டுதல் உள்ளிட்டவைகளில் இந்தியா பரந்த அளவிலான ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் துறையில் சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுக்கும் இந்தியா : இந்தியாவின் முன்னுரிமைக்கு ஏற்ப நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான 2023 செயல் திட்டத்தை வளர்ச்சி அமைச்சகம் ஏற்றுக்கொண்டு உள்ளது, இது நமது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட முன்னுரிமைகள் அனைத்திற்கும் வழி வகுக்கும் வகையில் உள்ளது.

பருவநிலை நிதி விவகாரத்தில், CBDR-RC கொள்கையை கருத்தில் கொண்டு, சர்வதேச அளவிலான பருவநிலை நிதியை விரைவாக அளவிடப்படுவது குறித்து இந்தியா தீவிரமான ஆலோசனை நடத்தி வருகிறது. 2024 ஆம் ஆண்டிற்கு உள்ளாக, ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் என்ற அளவில், காலநிலை நிதிக்கான புதிய கூட்டு அளவீட்டு இலக்கை (NCQG) எட்ட இந்தியா, சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தொழில்நுட்ப மாற்றம் தொடர்பான விவகாரத்தில், இந்தியா தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைக் காட்சிப்படுத்தும் வகையில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது, ஆதார், UPI, Cowin, Digilocker மற்றும் பிற தளங்களை உள்ளடக்கிய வளர்ச்சி உத்தியை உலகிற்குப் பிரதிபலிக்கும் வகையில், இந்த மாநாடு அமைந்து உள்ளது.

பொருளாதார மந்தநிலையை சமாளிக்க, வேண்டிய நடவடிக்கைகள் என்ன : பாலின சமத்துவ விவகாரத்தில், இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரங்களின் பயனாகவே, இன்று, இந்தியாவீன் குடியரசுத் தலைவர் பதவியை, பெண் ஒருவர் அலங்கரித்து இருப்பதாக, ஜி 20 நாடுகள், இந்தியாவை பாராட்டி வருகின்றன. கிரிப்டோ கரன்சி சொத்துக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள், சர்வதேச அளவில் ஒரு நிரந்தர கட்டமைப்பை உருவாக்கும் அம்சத்தின் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.

பொருளாதார ஸ்திரத்தன்மையை இழந்த நாடுகளுக்கு, ஜி20 அமைப்பில் உள்ள நாடுகள் உதவ வேண்டும் என்பது இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்தியா, தனது அண்டை நாடான இலங்கை, பொருளாதார இன்னலில் சிக்கித் தவித்தபோது, அதற்குத் தேவையான பொருளாதார நிதியுதவிகளை மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. பொருளாதார சிக்கலில் மாட்டி உள்ள ஜாம்பியா நாட்டிற்கு, பொருளாதார உதவிகளை மேற்கொள்ள இந்த மாநாட்டில் முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பினரான ஆப்பிரிக்க யூனியன் : ஜி20 நாடுகளின் அமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை சேர்க்க, இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் மிகுந்த வரவேற்பை அளித்து உள்ள நிலையில், இந்தியாவின் இந்த முயற்சி வெற்றி பெற்று உள்ளது.

இந்தியா அடைந்து உள்ள சாதனை வெற்றிகளை, உலக நாடுகளும் அறிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பாக, இந்த ஜி20 உச்சி மாநாடு விளங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பருவநிலை நிதி, நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தீர்வு எட்டப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பிரேசில் நாட்டில், அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டின் போது, இந்தியா மேற்கொண்ட முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து நிச்சயம் விவாதிக்கப்படும் என்று நம்புவோமாக....

இதையும் படிங்க: "நம்பிக்கையின்மையை அகற்ற மனிதநேய அணுகுமுறையை கடைப்பிடிப்போம்"- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்னுரை!

ஹைதராபாத்: ஜி20 அமைப்பில் இடம் பெற்று உள்ள நாடுகள், சர்வதேச அளவில் 85 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், 75 சதவீத அளவிலான சர்வதேச வர்த்தகத்தையும், மொத்த மக்கள்தொகையில், மூன்றில் இரண்டு பங்கு அளவிலான மக்கள்தொகையயும் தன்னகத்தே கொண்டு உள்ளன.

ஜி 20 நாடுகளின் 18வது உச்சி மாநாடு, தலைநகர் டெல்லியில் இன்று (செப். 9) துவங்கி நாளை (செப். 10) வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உள்ள சர்வதேச நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வதேச பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

சர்வதேச அளவில் இந்தியாவை காட்சிப்படுத்த சிறந்த வாய்ப்பு : தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவை, சர்வதேச அளவில் காட்சிப்படுத்தும் நல்ல வாய்ப்பாக அமைந்து உள்ளதாக, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வரும் IGIDR அமைப்பின் முன்னாள் துணைவேந்தரும், இந்திய அரசின் CACP அமைப்பின் முன்னாள் தலைவருமான எஸ். மகேந்திர தேவ் தெரிவித்து உள்ளார்.

ரஷ்ய - உக்ரைன் நாடுகளுக்கிடியேயான போர் உள்ளிட்ட சர்வதேச காரணிகளின் அடிப்படையில் உலகின் முக்கிய நாடுகளிடையே பிளவுகள் ஏற்பட்டு உள்ள நிலையில், இந்த உச்சி மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், இந்த மாநாட்டில் இருந்து விலகி இருப்பது, இந்த பிளவை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. இத்தகைய புவிசார் பிரச்சினைகளுக்கு இடையேயும், இந்த ஜி20 மாநாடு, இந்தியா தனது சாதனைகளை வெளிப்படுத்தி, உலகின் தெற்கு குரலாக ஒலிப்பதற்கான வாய்ப்பாக, இது அமைந்து உள்ளது.

பல்துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு என்ன : இந்த ஜி 20 உச்சி மாநாட்டிற்காக, நாடு முழுவதிலும் உள்ள 29 மாநிலங்களில் கடந்த 8 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களாக, பசுமை மேம்பாடு, பருவநிலை, நிதி, தொழில்நுட்ப மாறுபாடுகள், 21ஆம் நூற்றாண்டில் டிஜிட்டல் பொது கட்டமைப்பு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி உள்ளிட்டவைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. ஜி 20 நாடுகளில், ஆப்பிரிக்க யூனியனை சேர்ப்பதும், முக்கிய அம்சமாக உள்ளது.

பசுமை வளர்ச்சியில் பேரிடர் அபாயங்களைக் குறைத்தல், பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மாற்று எரிபொருள்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகள் மற்றும் போதாதுமான காலநிலை நிதி திரட்டுதல் உள்ளிட்டவைகளில் இந்தியா பரந்த அளவிலான ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் துறையில் சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுக்கும் இந்தியா : இந்தியாவின் முன்னுரிமைக்கு ஏற்ப நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான 2023 செயல் திட்டத்தை வளர்ச்சி அமைச்சகம் ஏற்றுக்கொண்டு உள்ளது, இது நமது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட முன்னுரிமைகள் அனைத்திற்கும் வழி வகுக்கும் வகையில் உள்ளது.

பருவநிலை நிதி விவகாரத்தில், CBDR-RC கொள்கையை கருத்தில் கொண்டு, சர்வதேச அளவிலான பருவநிலை நிதியை விரைவாக அளவிடப்படுவது குறித்து இந்தியா தீவிரமான ஆலோசனை நடத்தி வருகிறது. 2024 ஆம் ஆண்டிற்கு உள்ளாக, ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் என்ற அளவில், காலநிலை நிதிக்கான புதிய கூட்டு அளவீட்டு இலக்கை (NCQG) எட்ட இந்தியா, சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தொழில்நுட்ப மாற்றம் தொடர்பான விவகாரத்தில், இந்தியா தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைக் காட்சிப்படுத்தும் வகையில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது, ஆதார், UPI, Cowin, Digilocker மற்றும் பிற தளங்களை உள்ளடக்கிய வளர்ச்சி உத்தியை உலகிற்குப் பிரதிபலிக்கும் வகையில், இந்த மாநாடு அமைந்து உள்ளது.

பொருளாதார மந்தநிலையை சமாளிக்க, வேண்டிய நடவடிக்கைகள் என்ன : பாலின சமத்துவ விவகாரத்தில், இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரங்களின் பயனாகவே, இன்று, இந்தியாவீன் குடியரசுத் தலைவர் பதவியை, பெண் ஒருவர் அலங்கரித்து இருப்பதாக, ஜி 20 நாடுகள், இந்தியாவை பாராட்டி வருகின்றன. கிரிப்டோ கரன்சி சொத்துக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள், சர்வதேச அளவில் ஒரு நிரந்தர கட்டமைப்பை உருவாக்கும் அம்சத்தின் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.

பொருளாதார ஸ்திரத்தன்மையை இழந்த நாடுகளுக்கு, ஜி20 அமைப்பில் உள்ள நாடுகள் உதவ வேண்டும் என்பது இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்தியா, தனது அண்டை நாடான இலங்கை, பொருளாதார இன்னலில் சிக்கித் தவித்தபோது, அதற்குத் தேவையான பொருளாதார நிதியுதவிகளை மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. பொருளாதார சிக்கலில் மாட்டி உள்ள ஜாம்பியா நாட்டிற்கு, பொருளாதார உதவிகளை மேற்கொள்ள இந்த மாநாட்டில் முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பினரான ஆப்பிரிக்க யூனியன் : ஜி20 நாடுகளின் அமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை சேர்க்க, இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் மிகுந்த வரவேற்பை அளித்து உள்ள நிலையில், இந்தியாவின் இந்த முயற்சி வெற்றி பெற்று உள்ளது.

இந்தியா அடைந்து உள்ள சாதனை வெற்றிகளை, உலக நாடுகளும் அறிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பாக, இந்த ஜி20 உச்சி மாநாடு விளங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பருவநிலை நிதி, நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தீர்வு எட்டப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பிரேசில் நாட்டில், அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டின் போது, இந்தியா மேற்கொண்ட முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து நிச்சயம் விவாதிக்கப்படும் என்று நம்புவோமாக....

இதையும் படிங்க: "நம்பிக்கையின்மையை அகற்ற மனிதநேய அணுகுமுறையை கடைப்பிடிப்போம்"- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்னுரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.