ETV Bharat / bharat

போராட்டம் தீவிரப்படுத்தப்படும் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு

டெல்லி: அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் போராட்டம் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகவும் விவசாய சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

author img

By

Published : Dec 9, 2020, 7:28 PM IST

போராட்டம்
போராட்டம்

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 13 விவசாய சங்களுக்கு மத்திய அரசு வரைவு திட்டத்தை அனுப்பியது.

ஆனால், அவற்றை நிராகரிக்கப்போவதாகவும் போராட்டம் தீவிரப்படவுள்ளதாகவும் விவசாய சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

டெல்லி - ஹரியானா எல்லையில் உள்ள சிங்குவில் செய்தியாளர்களை சந்தித்த கிராந்திகாரி கிஷான் சங்கத் தலைவர் தர்ஷன் பால், "அரசு அனுப்பிய வரைவு திட்டம் நிராகரிக்கப்படுகிறது. டிசம்பர் 12ஆம் தேதி, டெல்லி- ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முடக்கவுள்ளோம்.

டிசம்பர் 14ஆம் தேதி, பாஜக அலுவலகங்களை முற்றுகையிடவுள்ளோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்படும். டெல்லிக்கு வந்து போராட்டத்தில் கலந்து கொள்ள மற்ற மாநில விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கிறோம்" என்றார்.

முன்னதாக, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். விவசாயிகள் எழுப்பும் குறைகளுக்கு தீர்வு காணும் வகையிலான வரைவு திட்டம் வகுக்கப்பட்டு அவர்களுக்கு அனுப்பப்படும் என அமித் ஷா தெரிவித்திருந்தார்.

ஆனால், வேளாண் சட்டங்களை நீக்குவதில் விவசாயிகள் உறுதியாக இருந்ததால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்று நடைபெறவிருந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 13 விவசாய சங்களுக்கு மத்திய அரசு வரைவு திட்டத்தை அனுப்பியது.

ஆனால், அவற்றை நிராகரிக்கப்போவதாகவும் போராட்டம் தீவிரப்படவுள்ளதாகவும் விவசாய சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

டெல்லி - ஹரியானா எல்லையில் உள்ள சிங்குவில் செய்தியாளர்களை சந்தித்த கிராந்திகாரி கிஷான் சங்கத் தலைவர் தர்ஷன் பால், "அரசு அனுப்பிய வரைவு திட்டம் நிராகரிக்கப்படுகிறது. டிசம்பர் 12ஆம் தேதி, டெல்லி- ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முடக்கவுள்ளோம்.

டிசம்பர் 14ஆம் தேதி, பாஜக அலுவலகங்களை முற்றுகையிடவுள்ளோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்படும். டெல்லிக்கு வந்து போராட்டத்தில் கலந்து கொள்ள மற்ற மாநில விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கிறோம்" என்றார்.

முன்னதாக, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். விவசாயிகள் எழுப்பும் குறைகளுக்கு தீர்வு காணும் வகையிலான வரைவு திட்டம் வகுக்கப்பட்டு அவர்களுக்கு அனுப்பப்படும் என அமித் ஷா தெரிவித்திருந்தார்.

ஆனால், வேளாண் சட்டங்களை நீக்குவதில் விவசாயிகள் உறுதியாக இருந்ததால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்று நடைபெறவிருந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.