லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் நிவாரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஷெர்பூர் கிராமத்தில் ஜூலை 8ஆம் தேதி, பவித்ரா என்பவர் ரோஹித், அபிஷேக் ஆகியோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட ரோஹித், அபிஷேக் இருவரும் பவித்ராவின் மைத்துனரை அவரது வீட்டிலிருந்து கடத்த முயன்றனர். பவித்ரா அவர்களைத் தடுத்தபோது, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பி ஓடிவிட்டனர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பவித்ராவை கொலைசெய்த நபர்களின் தலையைக் கொண்டுவருபவருக்கு 20 ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என அவரது கணவர் அறிவித்துள்ளார்.
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டாததை அடுத்து, அவர் இவ்வாறு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தி இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: பொன் வேண்டாம் பொண்ணே போதும் - 'மாஸான' மாப்பிள்ளை