ETV Bharat / bharat

காஷ்மீரில் ரூ.60 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - ஓட்டுநர் கைது

author img

By

Published : Oct 23, 2022, 2:25 PM IST

ஜம்மு-காஷ்மீரில் சரக்கு லாரியில் கடத்தப்பட்ட 60 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநரையும் கைது செய்தனர்.

Drugs
Drugs

உதம்பூர்: ஜம்மு-காஷ்மீரின் செனானி நாகாவில் இன்று(அக்.23) காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு லாரி ஒன்றை சோதனை செய்தனர். சோதனையில், லாரியில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து லாரியிலிருந்து 21.5 கிலோ எடை கொண்ட 60 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குல்விந்தர் சிங்கையும் கைது செய்தனர்.

பிடிபட்ட லாரி ஜம்மு-காஷ்மீரில் இருந்து உதம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவை கார் வெடித்து விபத்து... ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு...

உதம்பூர்: ஜம்மு-காஷ்மீரின் செனானி நாகாவில் இன்று(அக்.23) காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு லாரி ஒன்றை சோதனை செய்தனர். சோதனையில், லாரியில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து லாரியிலிருந்து 21.5 கிலோ எடை கொண்ட 60 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குல்விந்தர் சிங்கையும் கைது செய்தனர்.

பிடிபட்ட லாரி ஜம்மு-காஷ்மீரில் இருந்து உதம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவை கார் வெடித்து விபத்து... ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.