ETV Bharat / bharat

வாச்சாத்தி வழக்கு: குற்றவாளிகள் 19 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 10:20 PM IST

Vachathi case: வாச்சாத்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 215 பேரில் 19 பேர் தங்கள் தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

dharmapuri vachathi case 19 convicted person appeal in supreme court
தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி: தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த 1992-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அத்துமீறி குடியிருப்புகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த கிராமத்தில் இருந்த இளம்பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆண்களை கடுமையாக தாக்கி வீடுகளை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 1992-ஆம் ஆண்டு நடந்த வன்முறை குறித்து பலகட்ட போராட்டங்களுக்குப் பின் 1995-இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 4 ஐ.எப்.எஸ் அதிகாரிகள் உள்பட 124 வனத்துறையினர், 86 காவல் துறையினர், 5 வருவாய்த் துறையினர் என 269 பேர் மீது கடுமையாக தாக்குதல் மற்றும் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

1996-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய விசாரணை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2006-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதித்தது. சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011-இல் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வேல்முருகன், தீர்ப்பு வழங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட மலைக்கிராம மக்களையும், அப்பகுதியையும் நேரில் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். அதன்படி, 2023 மார்ச் 4-ஆம் தேதி, சம்பவம் நடந்த வாச்சாத்தி மலைக்கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்தார். வாச்சாத்தி மலைக்கிராமத்தில் இருந்து கலசப்பாடி, அரசநந்தம் உள்ளிட்ட மலைக்கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் சம்பவம் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.

வழக்கில் சம்பந்தப்பட்ட 54 பேர் இறந்த நிலையில், மீதமுள்ள 215 பேருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை கடந்த செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. மேலும் வாச்சாத்தியில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் அவர்களின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அல்லது தனியார், சுய வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வன அதிகாரி சிதம்பரம் உள்ளிட்ட 19 பேர், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: தென்காசியில் இளம்பெண் கூட்டு பாலியல்.. கொலை குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!

டெல்லி: தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த 1992-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அத்துமீறி குடியிருப்புகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த கிராமத்தில் இருந்த இளம்பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆண்களை கடுமையாக தாக்கி வீடுகளை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 1992-ஆம் ஆண்டு நடந்த வன்முறை குறித்து பலகட்ட போராட்டங்களுக்குப் பின் 1995-இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 4 ஐ.எப்.எஸ் அதிகாரிகள் உள்பட 124 வனத்துறையினர், 86 காவல் துறையினர், 5 வருவாய்த் துறையினர் என 269 பேர் மீது கடுமையாக தாக்குதல் மற்றும் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

1996-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய விசாரணை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2006-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதித்தது. சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011-இல் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வேல்முருகன், தீர்ப்பு வழங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட மலைக்கிராம மக்களையும், அப்பகுதியையும் நேரில் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். அதன்படி, 2023 மார்ச் 4-ஆம் தேதி, சம்பவம் நடந்த வாச்சாத்தி மலைக்கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்தார். வாச்சாத்தி மலைக்கிராமத்தில் இருந்து கலசப்பாடி, அரசநந்தம் உள்ளிட்ட மலைக்கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் சம்பவம் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.

வழக்கில் சம்பந்தப்பட்ட 54 பேர் இறந்த நிலையில், மீதமுள்ள 215 பேருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை கடந்த செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. மேலும் வாச்சாத்தியில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் அவர்களின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அல்லது தனியார், சுய வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வன அதிகாரி சிதம்பரம் உள்ளிட்ட 19 பேர், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: தென்காசியில் இளம்பெண் கூட்டு பாலியல்.. கொலை குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.