ETV Bharat / bharat

'பொறுப்பற்ற தன்மையால் தான் கரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது' - corona increased in India

கடந்தாண்டு இதே நேரத்தில் காணப்பட்ட நிலைமைகளுடன் ஒப்பிடும்போது கள அளவிலான நிலைமையில் முன்னேற்றம் இருப்பதாக பிரதமர் கூறிய போதிலும், தற்போதைய மூன்று மடங்கு பாதிப்புகள் , அதிக இறப்பு விகிதங்கள் போன்றவை நெருக்கடியைத்தான் பிரதிபலிக்கின்றன.

Covid Surge
கரோனா பரவல் வேகம்
author img

By

Published : Apr 23, 2021, 12:31 PM IST

கரோனா இரண்டாவது அலையின் மூர்க்கத்தனமான எழுச்சியால் தேசம் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக இருக்கும் என்று அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து கிடைத்த அனுபவங்கள் இருந்தபோதிலும், நமது ஆட்சியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து கவலைப்படவில்லை, மருத்துவ தயார்நிலையையும் கண்டுகொள்ளவில்லை. இந்த உறுதியற்ற வழிகள்தான் இந்த கரோனா இரண்டாவது அலையை மிகவும் ஆபத்தானதாக மாற்றியது.

கடந்தாண்டு இதே நேரத்தில் காணப்பட்ட நிலைமைகளுடன் ஒப்பிடும்போது கள அளவிலான நிலைமையில் முன்னேற்றம் இருப்பதாக பிரதமர் கூறிய போதிலும், தற்போதைய மூன்று மடங்கு பாதிப்புகள, அதிக இறப்பு விகிதங்கள் போன்றவை நெருக்கடியைப் பிரதிபலிக்கின்றன. கரோனா சோதனை மையங்களின் எண்ணிக்கை 2,500 ஆக உயர்த்தப்பட்டதாகவும் மத்திய அரசு கூறியது.

ஆனால், அதிக நோயாளிகளின் வருகை காரணமாக தேசிய தலைநகரிலேயே இரண்டு நாட்கள் சோதனை நிறுத்தப்பட்டது என்பதே உண்மை. மருத்துவமனைப் படுக்கைகளின் பற்றாக்குறை, ஏராளமான கோவிட் சிறப்பு மருத்துவமனைகள் நிறுவப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுகளின் உண்மைத்தன்மையை அம்பலப்படுத்தியது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய மரணங்கள் உண்மையிலேயே இதயத்தை பிளக்கின்றன. இந்தியா 6.6 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசியை 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இன்று நாட்டில் சொந்த குடிமக்களுக்கு போடுவதற்கு தடுப்பூசி இல்லை. குணப்படுத்தக்கூடிய மருத்துவப் பிரச்சினைகள் காரணமாகவும், நோயாளிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று புலம்பும் இளம் மருத்துவர்களின் குரல்களில் இருந்தும் அரசாங்கங்களின் செயலற்ற தன்மை தெளிவாகிறது. 162 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்த போதிலும், அவற்றில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே உண்மையில் தொடங்கப்பட்டது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பிரதமரால் நியமிக்கப்பட்ட பணிக்குழு தனது கடமையைச் சரியாகச் செய்திருந்தால், நாடு இன்று 3 லட்சம் பாதிப்புகள், பத்து விழுக்காடு இறப்புகளுடன் வருத்தப்படாது. அரசாங்கத்தின் தற்போதைய தடுப்பூசி கொள்கையும் உறுதியளிக்கவில்லை.

உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில், 60 விழுக்காடு அளவிற்கு இந்தியா உற்பத்தி செய்கிறது. அத்தகைய நாடு தடுப்பூசி பற்றாக்குறையைச் சந்தித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. தடுப்பூசி கணிசமான அளவிற்கு கோவிட் அச்சுறுத்தலைத் தவிர்க்க முடியும் என்று மொத்த உலகமும் நம்புகிறது. தடுப்பூசி உயிரிழப்புகளைத் தடுக்கும் என்றும் மேலும் தொற்றுப் பரவாமல் தடுக்கும் என்று உலகம் நம்புகிறது.

கோவிட் தடுப்பூசி சோதனை நிலையில் இருந்தபோதே, அமெரிக்கா தனது 30 கோடி மக்களுக்கு 60 கோடி டோஸ் ஆர்டர் செய்து அதற்கான முன்கூட்டியே முழு கட்டணத்தையும் செலுத்தியது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா 1.10 கோடி அளவுக்கு மட்டுமே ஆர்டர் செய்தது.

தடுப்பூசித் திட்டத்தை ஒவ்வொரு கட்டமாக செயல்படுத்தும் விதமாக ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டாலும், 3 கோடி முன்களப் பணியாளர்களில் 37 விழுக்காட்டினருக்கு மட்டுமே முதல் கட்டத்தில் தடுப்பூசி கிடைத்தது. 45 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அரசாங்கம் அனுமதித்தது. இருப்பினும், இன்றைய நிலைமை என்னவென்றால், பல மாநிலங்கள் தடுப்பூசிக்காக கெஞ்சிக் கொண்டிருக்கின்றன.

உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்க தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அளித்த விண்ணப்பத்தில் முடிவெடுப்பதில் தாமதம், மூன்று பொதுத்துறை நிறுவனங்களை இந்த செயல்பாட்டில் பங்கேற்க வைப்பதில் கால தாமதம் போன்றவை வைரஸ் ஆபத்தான பிறழ்வுகளை மேற்கொள்ள வழிவகுத்தது.

சமீபத்திய வளர்ச்சியாக, தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கியுள்ளது. மறுபுறம், இது அனைத்து வயது வந்தோருக்கான தடுப்பூசியை அறிவித்துள்ளது, இது 18 வயதைக் கடந்த அனைவரையும் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுடையதாக ஆக்குகிறது. 45 வயது, அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பொறுப்பை அது தக்க வைத்துக் கொண்டாலும், மீதமுள்ள வயதினருக்கு தடுப்பூசி போடும் பொறுப்பு, மாநிலங்களுக்கும், தனியார் துறைக்கும் விடப்பட்டது.

வேலையின்மை காரணமாக மக்கள் கடுமையான நிதி நெருக்கடிகளை அனுபவித்து வருகின்றனர். கடுமையான வருவாய் வீழ்ச்சியின் விளைவாக மாநில அரசுகளும் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன. இதுபோன்ற ஒரு முக்கியமான கட்டத்தில் மத்திய அரசு பொறுப்பை தட்டிக்கழிப்பது விவேகமற்றது. தடுப்பூசி இருப்பு குறைவாக இருக்கும் நிலையில், அதிகம் தேவைப்படும் மாநிலங்கள், அதிகம் தேவைப்படாத மாநிலங்கள் ஆகியவை ஒரே மாதிரியாக போட்டியிடுகின்றன.

இந்த சமத்துவமற்ற போட்டி நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தின் வேர்களைப் பாதித்துள்ளது. அனவருக்கும் இலவச தடுப்பூசி, தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவாதம் அளிக்காவிட்டால், கோவிட் மரணத்தை கட்டுப்படுத்த முடியுமா?

இதையும் படிங்க: காலி ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்றிச் சென்ற விமானப்படை விமானங்கள்

கரோனா இரண்டாவது அலையின் மூர்க்கத்தனமான எழுச்சியால் தேசம் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக இருக்கும் என்று அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து கிடைத்த அனுபவங்கள் இருந்தபோதிலும், நமது ஆட்சியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து கவலைப்படவில்லை, மருத்துவ தயார்நிலையையும் கண்டுகொள்ளவில்லை. இந்த உறுதியற்ற வழிகள்தான் இந்த கரோனா இரண்டாவது அலையை மிகவும் ஆபத்தானதாக மாற்றியது.

கடந்தாண்டு இதே நேரத்தில் காணப்பட்ட நிலைமைகளுடன் ஒப்பிடும்போது கள அளவிலான நிலைமையில் முன்னேற்றம் இருப்பதாக பிரதமர் கூறிய போதிலும், தற்போதைய மூன்று மடங்கு பாதிப்புகள, அதிக இறப்பு விகிதங்கள் போன்றவை நெருக்கடியைப் பிரதிபலிக்கின்றன. கரோனா சோதனை மையங்களின் எண்ணிக்கை 2,500 ஆக உயர்த்தப்பட்டதாகவும் மத்திய அரசு கூறியது.

ஆனால், அதிக நோயாளிகளின் வருகை காரணமாக தேசிய தலைநகரிலேயே இரண்டு நாட்கள் சோதனை நிறுத்தப்பட்டது என்பதே உண்மை. மருத்துவமனைப் படுக்கைகளின் பற்றாக்குறை, ஏராளமான கோவிட் சிறப்பு மருத்துவமனைகள் நிறுவப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுகளின் உண்மைத்தன்மையை அம்பலப்படுத்தியது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய மரணங்கள் உண்மையிலேயே இதயத்தை பிளக்கின்றன. இந்தியா 6.6 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசியை 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இன்று நாட்டில் சொந்த குடிமக்களுக்கு போடுவதற்கு தடுப்பூசி இல்லை. குணப்படுத்தக்கூடிய மருத்துவப் பிரச்சினைகள் காரணமாகவும், நோயாளிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று புலம்பும் இளம் மருத்துவர்களின் குரல்களில் இருந்தும் அரசாங்கங்களின் செயலற்ற தன்மை தெளிவாகிறது. 162 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்த போதிலும், அவற்றில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே உண்மையில் தொடங்கப்பட்டது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பிரதமரால் நியமிக்கப்பட்ட பணிக்குழு தனது கடமையைச் சரியாகச் செய்திருந்தால், நாடு இன்று 3 லட்சம் பாதிப்புகள், பத்து விழுக்காடு இறப்புகளுடன் வருத்தப்படாது. அரசாங்கத்தின் தற்போதைய தடுப்பூசி கொள்கையும் உறுதியளிக்கவில்லை.

உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில், 60 விழுக்காடு அளவிற்கு இந்தியா உற்பத்தி செய்கிறது. அத்தகைய நாடு தடுப்பூசி பற்றாக்குறையைச் சந்தித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. தடுப்பூசி கணிசமான அளவிற்கு கோவிட் அச்சுறுத்தலைத் தவிர்க்க முடியும் என்று மொத்த உலகமும் நம்புகிறது. தடுப்பூசி உயிரிழப்புகளைத் தடுக்கும் என்றும் மேலும் தொற்றுப் பரவாமல் தடுக்கும் என்று உலகம் நம்புகிறது.

கோவிட் தடுப்பூசி சோதனை நிலையில் இருந்தபோதே, அமெரிக்கா தனது 30 கோடி மக்களுக்கு 60 கோடி டோஸ் ஆர்டர் செய்து அதற்கான முன்கூட்டியே முழு கட்டணத்தையும் செலுத்தியது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா 1.10 கோடி அளவுக்கு மட்டுமே ஆர்டர் செய்தது.

தடுப்பூசித் திட்டத்தை ஒவ்வொரு கட்டமாக செயல்படுத்தும் விதமாக ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டாலும், 3 கோடி முன்களப் பணியாளர்களில் 37 விழுக்காட்டினருக்கு மட்டுமே முதல் கட்டத்தில் தடுப்பூசி கிடைத்தது. 45 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அரசாங்கம் அனுமதித்தது. இருப்பினும், இன்றைய நிலைமை என்னவென்றால், பல மாநிலங்கள் தடுப்பூசிக்காக கெஞ்சிக் கொண்டிருக்கின்றன.

உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்க தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அளித்த விண்ணப்பத்தில் முடிவெடுப்பதில் தாமதம், மூன்று பொதுத்துறை நிறுவனங்களை இந்த செயல்பாட்டில் பங்கேற்க வைப்பதில் கால தாமதம் போன்றவை வைரஸ் ஆபத்தான பிறழ்வுகளை மேற்கொள்ள வழிவகுத்தது.

சமீபத்திய வளர்ச்சியாக, தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கியுள்ளது. மறுபுறம், இது அனைத்து வயது வந்தோருக்கான தடுப்பூசியை அறிவித்துள்ளது, இது 18 வயதைக் கடந்த அனைவரையும் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுடையதாக ஆக்குகிறது. 45 வயது, அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பொறுப்பை அது தக்க வைத்துக் கொண்டாலும், மீதமுள்ள வயதினருக்கு தடுப்பூசி போடும் பொறுப்பு, மாநிலங்களுக்கும், தனியார் துறைக்கும் விடப்பட்டது.

வேலையின்மை காரணமாக மக்கள் கடுமையான நிதி நெருக்கடிகளை அனுபவித்து வருகின்றனர். கடுமையான வருவாய் வீழ்ச்சியின் விளைவாக மாநில அரசுகளும் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன. இதுபோன்ற ஒரு முக்கியமான கட்டத்தில் மத்திய அரசு பொறுப்பை தட்டிக்கழிப்பது விவேகமற்றது. தடுப்பூசி இருப்பு குறைவாக இருக்கும் நிலையில், அதிகம் தேவைப்படும் மாநிலங்கள், அதிகம் தேவைப்படாத மாநிலங்கள் ஆகியவை ஒரே மாதிரியாக போட்டியிடுகின்றன.

இந்த சமத்துவமற்ற போட்டி நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தின் வேர்களைப் பாதித்துள்ளது. அனவருக்கும் இலவச தடுப்பூசி, தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவாதம் அளிக்காவிட்டால், கோவிட் மரணத்தை கட்டுப்படுத்த முடியுமா?

இதையும் படிங்க: காலி ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்றிச் சென்ற விமானப்படை விமானங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.