ETV Bharat / bharat

கரோனா நிலவரம் - ஒரே நாளில் 43,393 பேருக்கு பாதிப்பு

author img

By

Published : Jul 9, 2021, 11:37 AM IST

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரத்து 393 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

COVID-19
COVID-19

தினசரி கரோனா பாதிப்பு நிலவரத்தை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (ஜூலை 9) வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43 ஆயிரத்து 393 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டின் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை மூன்று கோடியே ஏழு லட்சத்து 52 ஆயிரத்து 950ஆக அதிகரித்துள்ளது. தற்போது நான்கு லட்சத்து 58 ஆயிரத்து 727 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று 911 பேர் கரோனாவால் உயிரிழந்த நிலையில், நாட்டின் மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து ஐந்தாயிரத்து 939 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 459 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை (ஜூலை 8) ஆம் தேதி வரை நாட்டில் 42 கோடியே 70 லட்சத்து 16 ஆயிரத்து 605 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (ஜூலை 8) மட்டும் 17 லட்சத்து 90 ஆயிரத்து 708 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 24 மணிநேரத்தில் 40 லட்சத்து 23 ஆயிரத்து 173 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 36 கோடியே 89 லட்சத்து 91 ஆயிரத்து 222 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கர்பிணிக்கு சிகா வைரஸ் பாதிப்பு - அச்சத்தில் கேரளா

தினசரி கரோனா பாதிப்பு நிலவரத்தை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (ஜூலை 9) வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43 ஆயிரத்து 393 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டின் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை மூன்று கோடியே ஏழு லட்சத்து 52 ஆயிரத்து 950ஆக அதிகரித்துள்ளது. தற்போது நான்கு லட்சத்து 58 ஆயிரத்து 727 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று 911 பேர் கரோனாவால் உயிரிழந்த நிலையில், நாட்டின் மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து ஐந்தாயிரத்து 939 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 459 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை (ஜூலை 8) ஆம் தேதி வரை நாட்டில் 42 கோடியே 70 லட்சத்து 16 ஆயிரத்து 605 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (ஜூலை 8) மட்டும் 17 லட்சத்து 90 ஆயிரத்து 708 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 24 மணிநேரத்தில் 40 லட்சத்து 23 ஆயிரத்து 173 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 36 கோடியே 89 லட்சத்து 91 ஆயிரத்து 222 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கர்பிணிக்கு சிகா வைரஸ் பாதிப்பு - அச்சத்தில் கேரளா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.