இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 81 ஆயிரத்து 386 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 49 லட்சத்து 65 ஆயிரத்து 463ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
நேற்று (மே.16) கரோனாவால் பாதிக்கப்பட்ட 4,106 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 74 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">