ETV Bharat / bharat

கரோனாவால் ஒரே நாளில் 4,077 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : May 16, 2021, 12:50 PM IST

நேற்று(மே.15) ஒரே நாளில் மூன்று லட்சத்து 11 ஆயிரத்து 170 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

COVID-19 India tracker
கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 11 ஆயிரத்து 170 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 77ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

நேற்று (மே.15) கரோனாவால் பாதிக்கப்பட்ட 4,077 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 70 ஆயிரத்து 284 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரத்து 335 ஆக உள்ளது.

தற்போது 36 லட்சத்து 18 ஆயிரத்து 458 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை, மொத்தமாக 18 கோடியே 22 லட்சத்து 20 ஆயிரத்து 164 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 11 ஆயிரத்து 170 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 77ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

நேற்று (மே.15) கரோனாவால் பாதிக்கப்பட்ட 4,077 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 70 ஆயிரத்து 284 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரத்து 335 ஆக உள்ளது.

தற்போது 36 லட்சத்து 18 ஆயிரத்து 458 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை, மொத்தமாக 18 கோடியே 22 லட்சத்து 20 ஆயிரத்து 164 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.