ETV Bharat / bharat

நாட்டின் 15ஆவது ஜனாதிபதி யார்? - தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது

author img

By

Published : Jul 21, 2022, 9:43 AM IST

குடியரசுத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 21)நடைபெறுகிறது. மாலை முடிவுகள் வெளியாகிறது.

இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதி யார்? தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது
இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதி யார்? தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது

டெல்லி: இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் சென்ற ஜூலை 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இன்று(ஜூலை 21) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கைக்கு பின் ராம்நாத் கோவிந்திற்குப் பிறகு நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்கப் போவது யார் என்பதை அறியலாம்.

ஆளும் மத்திய அரசான பாஜக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முர்மு மற்றும் எதிர்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.அதன்பின்னர் ஜூலை 25-ம் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பார். அனைத்து மாநிலங்களின் வாக்குப் பெட்டிகளும் நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அறை எண் 63-ல் வாக்கு எண்ணும் பணிக்கு தேர்தல் அதிகாரிகள் தயாராக உள்ளனர்.

காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் நடத்தும் தலைமை தேர்தல் அதிகாரியான ராஜ்யசபா பொதுச்செயலாளர் பி.சி. மோடி, வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிடுவார். இதன் முடிவுகள் மாலைக்குள் அறிவிக்கப்படும். எம்.பி.க்களின் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட பிறகு, அகர வரிசைப்படி 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு முடிவு வெளியாகும்.

தேர்தல் முடிந்த நாளன்றே மாநிலங்களவையில் இருந்து அனைத்து வாக்குப் பெட்டிகளும் நாடாளுமன்றத்தின் அறைக்கு கொண்டு வரப்பட்டு பூட்டப்பட்டுள்ளது.

30 மையங்களில் நடைபெற்ற தேர்தலில் 776 எம்.பி.க்கள் மற்றும் 4,033 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய மொத்தம் 4,809 வாக்காளர்களுக்கு வாக்கு அளிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

ஆனால் நியமன எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை. ஜூலை 19 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்த வாக்காளர்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜக எம்பிக்கள் சன்னி தியோல், சஞ்சய் தோத்ரே உள்ளிட்ட 8 எம்பிக்கள் வாக்களிக்கவில்லை.

இதையும் படிங்க:குடியரசுத் தலைவர் தேர்தல் நிறைவு: தமிழ்நாட்டிற்கான வாக்குப்பெட்டியை டெல்லி கொண்டு சென்ற அலுவலர்கள்!

டெல்லி: இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் சென்ற ஜூலை 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இன்று(ஜூலை 21) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கைக்கு பின் ராம்நாத் கோவிந்திற்குப் பிறகு நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்கப் போவது யார் என்பதை அறியலாம்.

ஆளும் மத்திய அரசான பாஜக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முர்மு மற்றும் எதிர்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.அதன்பின்னர் ஜூலை 25-ம் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பார். அனைத்து மாநிலங்களின் வாக்குப் பெட்டிகளும் நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அறை எண் 63-ல் வாக்கு எண்ணும் பணிக்கு தேர்தல் அதிகாரிகள் தயாராக உள்ளனர்.

காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் நடத்தும் தலைமை தேர்தல் அதிகாரியான ராஜ்யசபா பொதுச்செயலாளர் பி.சி. மோடி, வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிடுவார். இதன் முடிவுகள் மாலைக்குள் அறிவிக்கப்படும். எம்.பி.க்களின் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட பிறகு, அகர வரிசைப்படி 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு முடிவு வெளியாகும்.

தேர்தல் முடிந்த நாளன்றே மாநிலங்களவையில் இருந்து அனைத்து வாக்குப் பெட்டிகளும் நாடாளுமன்றத்தின் அறைக்கு கொண்டு வரப்பட்டு பூட்டப்பட்டுள்ளது.

30 மையங்களில் நடைபெற்ற தேர்தலில் 776 எம்.பி.க்கள் மற்றும் 4,033 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய மொத்தம் 4,809 வாக்காளர்களுக்கு வாக்கு அளிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

ஆனால் நியமன எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை. ஜூலை 19 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்த வாக்காளர்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜக எம்பிக்கள் சன்னி தியோல், சஞ்சய் தோத்ரே உள்ளிட்ட 8 எம்பிக்கள் வாக்களிக்கவில்லை.

இதையும் படிங்க:குடியரசுத் தலைவர் தேர்தல் நிறைவு: தமிழ்நாட்டிற்கான வாக்குப்பெட்டியை டெல்லி கொண்டு சென்ற அலுவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.