ETV Bharat / bharat

ரத்தாகும் பாஜக கொண்டுவந்த 'மதமாற்றத் தடை சட்டம்' - கர்நாடக அரசு முடிவு

author img

By

Published : Jun 15, 2023, 9:27 PM IST

கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

பெங்களூரு (கர்நாடகா): கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையாவின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று கொண்ட நிலையில், அம்மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடாகவில் முந்தைய பாஜகவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய கர்நாடக அமைச்சரவை இன்று (ஜூன் 15) முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்க உள்ள அம்மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதாவை அரசு தாக்கல் செய்ய உள்ளது. இதனிடையே இந்த " 'மதமாற்ற எதிர்ப்பு மசோதா' குறித்து கர்நாடக அமைச்சரவையில் இன்று விவாதிக்கப்பட்டது.

அப்போது, 2022-ல் பாஜக அரசு கொண்டு வந்த மாற்றங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், வரும் ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் கூட்டத்தொடரில் இது தாக்கல் செய்யப்படும்" என்று அம்மாநில சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்துள்ளார். கடந்த 2022-ல் காங்கிரஸின் எதிர்ப்பையும் மீறி, கர்நாடக மத சுதந்திரப் பாதுகாப்புச் சட்டம் (anti-conversion law) அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆளும் பல மாநிலங்களில் கொண்டுவரப்பட வற்புறுத்தல், தவறாக சித்தரித்தல் அல்லது கவர்ச்சி மூலம் உள்ளிட்டவைகளால் செய்யப்படுவதாக கூறப்படும் மத மாற்றத்திற்கு எதிரான சட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் அம்மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் செப்டம்பரில் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்தின் மூலம் இதனை மீறுபவர்களுக்கு 25,000 அபராதத்துடன் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், சிறார், பெண்கள், எஸ்சி/எஸ்டி விதிகளை மீறுபவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கவும், வெகுஜன மதமாற்றம் செய்யப்பட்ட வழக்குகளில் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். குறிப்பாக, ஒரு மதத்தைச் சேர்ந்த ஆண் மற்றொரு மதத்தைச் சேர்ந்த பெண்ணுடன் சட்டத்திற்குப் புறம்பாக மதமாற்றம் செய்வதற்காக அல்லது அதற்கு நேர்மாறாக, திருமணத்திற்கு முன் அல்லது பின் அல்லது திருமணத்திற்கு முன் அல்லது பின் பெண்ணை மதமாற்றம் செய்வதன் மூலம் நடக்கும் எந்தவொரு திருமணமும், குடும்ப நீதிமன்றத்தால் செல்லாது என அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, சாவித்ரிபாய் பூலே(Savitribai Phule), இந்திரா காந்திக்கு நேரு எழுதிய கடிதங்கள் மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் (BR Ambedkar) பற்றிய கவிதைகள் குறித்த பாடத்திட்டங்களை பள்ளி பாடப்புத்தகங்களில் சேர்ப்பதற்கும், ஆர்எஸ்எஸ் நிறுவனர் மற்றும் சாவர்க்கர் (Savarkar) பற்றிய அத்தியாயங்களை நீக்கவும் கர்நாடகா அரசு முடிவு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு லண்டனில் கத்திக்குத்து; பிரேசில் இளைஞர் கைது!

பெங்களூரு (கர்நாடகா): கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையாவின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று கொண்ட நிலையில், அம்மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடாகவில் முந்தைய பாஜகவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய கர்நாடக அமைச்சரவை இன்று (ஜூன் 15) முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்க உள்ள அம்மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதாவை அரசு தாக்கல் செய்ய உள்ளது. இதனிடையே இந்த " 'மதமாற்ற எதிர்ப்பு மசோதா' குறித்து கர்நாடக அமைச்சரவையில் இன்று விவாதிக்கப்பட்டது.

அப்போது, 2022-ல் பாஜக அரசு கொண்டு வந்த மாற்றங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், வரும் ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் கூட்டத்தொடரில் இது தாக்கல் செய்யப்படும்" என்று அம்மாநில சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்துள்ளார். கடந்த 2022-ல் காங்கிரஸின் எதிர்ப்பையும் மீறி, கர்நாடக மத சுதந்திரப் பாதுகாப்புச் சட்டம் (anti-conversion law) அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆளும் பல மாநிலங்களில் கொண்டுவரப்பட வற்புறுத்தல், தவறாக சித்தரித்தல் அல்லது கவர்ச்சி மூலம் உள்ளிட்டவைகளால் செய்யப்படுவதாக கூறப்படும் மத மாற்றத்திற்கு எதிரான சட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் அம்மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் செப்டம்பரில் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்தின் மூலம் இதனை மீறுபவர்களுக்கு 25,000 அபராதத்துடன் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், சிறார், பெண்கள், எஸ்சி/எஸ்டி விதிகளை மீறுபவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கவும், வெகுஜன மதமாற்றம் செய்யப்பட்ட வழக்குகளில் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். குறிப்பாக, ஒரு மதத்தைச் சேர்ந்த ஆண் மற்றொரு மதத்தைச் சேர்ந்த பெண்ணுடன் சட்டத்திற்குப் புறம்பாக மதமாற்றம் செய்வதற்காக அல்லது அதற்கு நேர்மாறாக, திருமணத்திற்கு முன் அல்லது பின் அல்லது திருமணத்திற்கு முன் அல்லது பின் பெண்ணை மதமாற்றம் செய்வதன் மூலம் நடக்கும் எந்தவொரு திருமணமும், குடும்ப நீதிமன்றத்தால் செல்லாது என அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, சாவித்ரிபாய் பூலே(Savitribai Phule), இந்திரா காந்திக்கு நேரு எழுதிய கடிதங்கள் மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் (BR Ambedkar) பற்றிய கவிதைகள் குறித்த பாடத்திட்டங்களை பள்ளி பாடப்புத்தகங்களில் சேர்ப்பதற்கும், ஆர்எஸ்எஸ் நிறுவனர் மற்றும் சாவர்க்கர் (Savarkar) பற்றிய அத்தியாயங்களை நீக்கவும் கர்நாடகா அரசு முடிவு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு லண்டனில் கத்திக்குத்து; பிரேசில் இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.