கொல்கத்தா: 1950ஆம் ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பை, அன்னை தெரசா கொல்கத்தாவில் தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் பயனடைந்துவருகின்றனர்.
ஆனால் கிறிஸ்துமஸ் அன்று மத்திய அரசு இந்தியாவில் உள்ள அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியதாகவும், இதனால் 22 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள், ஊழியர்கள் உணவு, மருந்துகள் இன்றி தவித்துவருவதாகவும் மம்தா குற்றம் சுமத்தியுள்ளார்.
![Missionaries of Charity update Mamata Banerjee on Missionaries of Charity Centre has frozen bank accounts of Missionaries of Charity வங்கிக் கணக்குகளை முடக்கிய ஒன்றிய அரசு ஒன்றிய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அன்னை தெரசா மிஷினரி சேவை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14024185_mamtha.png)
இது குறித்து மம்தா அவரது ட்விட்டர் பக்கத்தில், “சட்டம் மிக முக்கியமானது என்றாலும், அதற்காக மனிதாபிமான நடவடிக்கைகளை முடக்குவதை ஏற்க முடியாது” எனப் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: தெலங்கானா - சத்தீஸ்கர் எல்லையில் துப்பாக்கிச்சூடு - 6 மாவோயிஸ்ட் உயிரிழப்பு